நோட்டான்னா தாங்க பயம் மத்தபடி நாங்க தேசிய கட்சிங்க... விடாமல் விரட்டும் நெட்டிசன்ஸ்!
நோட்டாவை விட பாஜக குறைவான ஓட்டு வாங்கியதால் சமூக வலைத்தளங்களில் செம அடி வாங்குகிறது. வச்சு செய்கிறார்கள்.
Recommended Video
சென்னை: தமிழ்நாட்டில் காலூன்றுவோம், கையை ஊன்றுவோம் என்று கூறி வரும் பாஜக இடைத்தேர்லில் 3000 ஓட்டு கூட வாங்கவில்லை. குறிப்பாக நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களே வாங்கியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
2019 லோக்சபா தேர்தல், தமிழக சட்டசபைத் தேர்தல் வரை இதனை வச்சு செய்வார்கள் நெட்டிசன்ஸ். அதைவிட தமிழிசை சவுந்தரராஜன் கூறும் கருத்துக்களும் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.
நோட்டாவை நீக்க வேண்டும் என்று சொன்னாலும் அதற்கும் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். மொத்தத்தில் தமிழகத்தில் பாஜக என்ற கட்சியே அடிதான் வாங்குகிறது.
|
தேசிய கட்சிங்க
அசுர பலத்துடன் முன்னேறுவோம் - தமிழிசை எங்களுக்கு நோட்டா னா தாங்க பயம் மத்தபடி நாங்க தேசியகட்சிங்க என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
கட்டி தூக்கிட்டாங்களே
இப்படி கட்டி தூக்கிட்டாங்களே... இதுக்கு நோ கமெண்ட்ஸ்
|
எத்தனை பேரு
சிவகுமாரை அனுப்புனா, பாஜவுக்கு ஓட்டுப்போடவங்க பேரையெல்லாம் மனப்பாடமா ஒப்பிச்சிருவாரு :))
என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.
என்னா அடி
இதுக்கு மேல இனி தமிழ்நாட்டில தனியா நிக்க பாஜக ஆசைப்படுவாங்க? சத்தமில்லாம சிரிங்க மக்களே!
|
பாஜக இருக்கக்கூடாது
நோட்டா இருக்கக்கூடாது என்பது என் கருத்து என்று தமிழிசை சொல்ல, அதற்கு பாஜக இந்தியாவிலே இருக்கக்கூடாது என்பது மக்கள் கருத்து என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். இன்னும் என்னென்ன வரப்போகுதோ? ஒன் இந்தியா வாசர்கள் வெயிட்டிங்.