2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்கனுமா.. அப்போ 5 நிமிஷத்துக்கு ஒருவாட்டி நாள் ஃபுல்லா வெடிக்கலாமா சார்?
சென்னை: தீபாவளி தினத்தில் மொத்தமே 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக கலாச்சாரப்படி காலையில் பட்டாசு வெடிப்பதுதான் வழக்கம் என வாதிடப்பட்டது.
இதைடுத்து காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் என பிரித்துக்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பேரில் தமிழக அரசு அறிவித்த காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையுமான காலக்கெடு தவிர்த்து பிற நேரங்களில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், கலாட்டா மீம்ஸ்கள் சுற்றி வருகின்றன.
|
பிரித்து, பிரித்து
ஒருநாளைக்கு 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க முடியும் என்பது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. அப்படியானால், 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என பிரித்துக்கொண்டு வெடிக்கலாமா என்று கேட்கிறது இந்த மீம்.
— மகாராஜா ® (@maharaja_2020) November 5, 2018 |
பள்ளிக்கூடங்கள் காலி
பட்டாசு வெடித்ததற்காக சிறுவர்களை சிறையில் தள்ளினால், பள்ளிக்கூடங்களே காலியாகிவிடுமே என்று சொல்கிறது இந்த மீம். உண்மைதானே..
|
நாளிதழ் செய்தி
பட்டாசு வெடித்ததற்காக, சிறுவர்களை கைது செய்தால், நாளிதழில் செய்தி வெளியாகும்போது, இப்படித்தான் இருக்கும் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்.
|
தனிப்படை
பட்டாசு வெடித்ததற்காக, சிறுவர்களை கைது செய்ய புறப்படும் தனிப்படை, எஸ்வி சேகர் மற்றும் எச்.ராஜாவை நீதிமன்றம் கைது செய்ய சொன்னபோது செய்யவில்லையே, என கேட்கிறது இந்த மீம்.