ஒரு ஆடி மாசத்துக்கே இப்டி சலிச்சுக்கிறாங்க.. இங்க எங்களுக்கு 30 வருசமா ஆடி மாசம்தான் சார்!
சென்னை: ஆடி மாதம் பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், புதுமனைவியை பிரிந்திருக்கும் சோகத்தை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் புதுமாப்பிள்ளைகள்.
ஆடி மாதம் என்றால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆனவர்களுக்கு ஞாபகத்திற்கு வருவது தள்ளுபடி. ஆடி மாதத் தள்ளுபடியிலேயே தீபாவளி, பொங்கலுக்கு புது ஆடைகள் எடுத்து வைத்துக் கொண்டால் செலவு குறையும் என்பது அவர்களது கருத்து. அதனாலேயே ஆண்டுதோறும் ஆடி எப்போது வரும், தள்ளுபடி எப்போது போடுவார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் இதற்கு நேர்மாறாக ஏன் தான் இந்த ஆடி மாதம் வந்ததோ என நொந்து கொள்வார்கள் புதுமணத் தம்பதிகள். புதிதாக திருமணமாகி, தங்களுக்கென ஒரு குடும்பம் என புது வாழ்க்கையை ஆரம்பிக்கும் நிலையில், ஆடி மாதத்தைக் காரணம் காட்டி பெற்றோர் பிரித்து வைத்து விடுவதே அவர்களது சோகத்திற்கு காரணம்.
இப்படியாக எதிர்பார்ப்பு, எதிர்ப்பு என கலவையான ஆடி மாதத்தை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். குறிப்பாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் புதுமணத் தம்பதிகள்தான் அவர்களது கண்டெண்ட்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications