தமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது.. கோபு- பாபு கட்சியில் இணைந்தனர்!!!!!!!
சென்னை: தமிழ் திரைப்பட வசனகர்த்தாக்களான கோபு - பாபு ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்து விட்டனர்.
கட்சி விட்டு கட்சி தாவுவது அரசியலில் சகஜம். அதே போல துறை விட்டு கட்சி தாவுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திரைப்பட வசனகர்த்தாக்கள் என்ற பெயருடன் வலம் வந்த கோபு பாபு இன்று பாஜகவில் இணைந்து விட்டனர்.
இதுகுறித்து பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஒரு டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடகங்களுக்கு வசனம் எழுதிய இரட்டையர்தான் இந்த கோபுவும், பாபுவும். குறிப்பாக ஒய்.ஜி.மகேந்திரன் குரூப் டிராமாக்களுக்கு வசனம் எழுதியவர்கள்.
கோபுவும் பாபுவும்
சொப்பன வாழ்வில், மாதவா கேசவா என பல நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்கள் இந்த கோபு பாபு. தொடர்ந்து நாடகங்களில் கோலோச்சி வந்த வசனகர்த்தாக்கள். தற்போது பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
|
மகிழ்ச்சியில் தமிழிசை
கோபு பாபு பாஜகவுக்கு வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் டாக்டர் தமிழசை செளந்தரராஜன். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், இன்று கோபு,பாபு என்று அழைக்கப்படும் பிரபல திரைப்பட வசனகர்த்தாக்கள்.. பாஜகவில்..தேசியசெயலர் அண்ணன் H ராஜா..அவர்கள் முயற்சியிலும்.. முன்னிலையிலும்.. பாஜக வில் இணைந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
குவிந்த கருத்துக்கள்
கோபு பாபு வருகை குறித்து மக்கள் தங்களது கருத்துக்களை அதே டிவீட்டில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று இது.
|
அப்ப ரஜினி, கமல் எல்லாம்!
அப்ப கமல், ரஜினியெல்லாம் அவ்வளவுதான் என இவர் கட்டியம் கூறுகிறார்.
— ஓவியபுலவன் (Oviyapulavan) (@Onedipuli2001) July 16, 2018 |
இது என்னான்னு தெரியலையே!
இவர் ஏன் இப்படி ஓடுகிறார் என்று தெரியவில்லை. ஏதோ கருத்து சொல்ல வருகிறார என்று மட்டும் தெரிகிறது.