புனேவுக்கு போராடும் வீரன், இனி சென்னை அணியின் மன்னன்.. மகேந்திர பாகுபலி டோணி.. தெறிக்கும் மீம்
ஹைதராபாத்: ஐபிஎல் பைனலில் புனே அணியும் மும்பை அணியும் இன்று மோதி வரும் நிலையில், டோணியை புகழ்ந்து மீம்ஸ்கள் தெறிக்கின்றன. புனே அணிக்கு இதுதான் ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியாகும். அடுத்த சீசன் முதல் அந்த அணியும், குஜராத் அணியும் இருக்கப்போவதில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் அடுத்த வருடம் முதல் ஆட உள்ளன.
டோணி மீண்டும் சிஎஸ்கே கேப்டனாவார் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு. புனே அணியின் ஒரே இந்திய நட்சத்திர வீரராக டோணி பார்க்கப்படுகிறார். என்னதான் கேப்டனாக ஸ்மித் இருந்தாலும் டோணிக்காகவே ரசிகர்கள் அந்த அணியை ஆதரிக்கிறார்கள்.
இந்த நிலையில், போட்டி ஆரம்பிக்கும் முன்பே டோணியை புகழ்ந்து மீம்ஸ்கள் தெறித்து வருகின்றன.
|
மகேந்திர பாகுபலி
எலிகாப்டர் ஷாட் கண்டறிந்தவன், ஏழு முறை டீமை ஃபைனல் அழைத்து சென்றவன், புனேவுக்கு போராடும் வீரன், இனி சென்னை அணியின் மன்னன்,
மகேந்திர பாகுபலி, என்று கூறுகிறது இந்த மீம்.
|
யார் பெற்ற மகனோ..
ஸ்மித்தாலதான் புனே ஜெயிக்குதுன்னு நெனச்சுட்டு சுத்துறானுங்க ஆனா உண்மை இதுவே, எனக் கூறி கத்தி திரைப்படத்தில் உண்மையாக உழைத்த ஹீரோ ஒதுங்கியிருக்கும் காட்சியை மீமாக போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
புனே உரிமையாளருக்கு பதிலடி
யாராச்சும் பிச்சை கேட்டா அஞ்சோ பத்தோ போடுவீங்க ஒரு ஐபிஎல் கப்பையே பிச்சையா போட்டு பாத்திருக்கீங்களா?, இன்னிக்கு பாப்பீங்க. இவ்வாறு கூறி புனே அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஷ் கோயங்காவுக்கு டோணி, கோப்பையை பரிசளிக்க உள்ளதாக கேலி செய்கிறது இந்த டிவிட்.
|
பைனலில் சாதனை
பார், 7வது முறையாக தனது டீம் தேரை ஃபைனலுக்கு இழுத்து வரும் என் தலைவனை பார். இவ்வாறு கூறி பாகுபலி பட ஸ்டில்லை பயன்படுத்தியுள்ளது இந்த மீம்.