ஆஹா... அதிரடி படை மாதிரி விரட்டி வாராய்ங்களே..!! ஊரு ஒன்னு கூடிட்டாங்கப்பா...!
டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கியது குறித்தும் அவரே ஒதுங்கி விட்டதாக கூறியதை வைத்தும் ஏராளமான சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சென்னை: சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று செய்தியாளர்கிளிடம் பேசிய டிடிவி தினகரன் தான் நேற்றே ஒதுங்கி விட்டதாக கூறினார். ஒன்றும் இல்லாத விஷயத்தையே வச்சு செய்து வரும் நெட்டிசன்கள் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிய செய்தியை வைத்து அல்வா கிண்டியுள்ளனர்.
இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையதளங்களில் வலம் வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
விடுகதையா இந்த வாழ்க்கை
விடுகதையா இந்த வாழ்க்கை... நம்ம டிடிவி தினகரன் முத்து படத்த பாத்துட்டுதான் இந்த முடிவு எடுத்திருப்பார் போல என்கிறது இந்த மீம்...
ஓபிஎஸும் இபிஎஸும்..
நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன்... கட்சியோ ஆட்சியோ பலவீனப்பட நான் காரணமாக இருக்க மாட்டேன்... டிடிவி தினகரன் மீது ஓபிஎஸும் இபிஎஸும் கரியை பூசி விட்டதகா கூறுகிறது இந்த மீம்...
ஒன்னு கூடிட்டாங்கப்பா..
ஆஹா... அதிரடி படை மாதிரி விரட்டி வாராய்ங்களே..!! ஊரு ஒன்னு கூடிட்டாங்கப்பா...!! என்கிறது இந்த மீம்...
உனக்கு விவரம் பத்தாது
எடப்பாடி: பங்கு பங்கு நான் சிஎம்மா இருக்குறேன் பங்கு?
பன்னீர்: பங்கு உனக்கு விவரம் பத்தாது நானே சிஎம்மா இருக்குறேன்.. என தற்போதைய அரசியல் நிலவரத்தை கலாக்கிறது இந்த மீம்..