அப்புறம் டைரக்டர் சார்?? என்ன இந்தப் பக்கம்...??
பாகுபலி - 2 படம் இணையதளத்தில் சட்டத்திற்குவிரோமாக வெளியானதைக் கண்டித்து இணையதளங்களில் மீம்ஸ்க்ள் குவிந்து வருகின்றனர்.
சென்னை: எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் பாகுபலி-2 இன்று தமிழகத்தில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏறபட்ட பணப்பிரச்சனை காரணமாக பாகுபலி - 2 முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில் இந்தப்படம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டது.. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இணையதளத்தில் வெளியான இந்தப்படத்தை 6000 பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இந்நிலையில் இதனைக் கண்டித்து இணையதளங்கள் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
அடுத்த படத்த பாரு போ
அதான் பாகுபலி முடிஞ்சுருச்சே அடுத்த படத்த பாரு போ
என்ன இந்தப் பக்கம்.
அப்புறம் டைரக்டர் சார்?? என்ன இந்தப் பக்கம்... என கலாய்க்கிறது இந்த மீம்..
உன் மேல தான் சந்தேகமே
எனக்கு உன் மேல தான் சந்தேகமே என தமிழ் ராக்கர்ஸை கலாய்க்கிறது எந்த மீம்...
இருக்குறதே வெளிநாட்ல தான்டா
தமிழகத்தில் இணையக்காட்சிகளை தடுக்க பாகுபலி முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது... அடப்பாவிகளா அவன் இருக்குறதே வெளிநாட்ல தான்டா...
இந்த கூத்து வேறவா...
கட்டப்பா: நான் உயிரோட தான்டா இருக்கேன்.. அட கடவுளே இதுல இந்த கூத்து வேறவா...
இன்னும் படமே ரிலீஸ் ஆகலயேயா....!!
யோவ்... இன்னும் படமே ரிலீஸ் ஆகலயேயா....!!! என பாகுபலி -2 இன்டர்நெட்டில் வெளியானதை கலாய்க்கிறது இந்த மீம்....
விசாரணை கமிஷன் வைக்க சொல்லு
இதுக்கு ஏதாவது விசாரணை கமிஷன் வைக்க சொல்லு அப்புறம் இத பத்தி எல்லாம் பேசலாம்... என்கிறது மீம்...
வருத்தம் தெரிவிக்க வச்சீங்க..
விட்டிருந்தா அவனவன் டவுன்லோட் பண்ணி வீட்டுலேயே பாத்திருப்பாங்க... இதுக்கு ஏனடா தேவை இல்லாம என்னை வருத்தம் தெரிவிக்க வச்சீங்க.. நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலைய பாத்துக்கிட்டு இருந்திரப்பேன்...