இந்த உலகம் முழுக்க கொரோனாவோட போராடுது.. இந்தியாவுல மட்டும் தான் உங்ககூட போராட வேண்டியதா இருக்கு..!
கொரோனா கவச உடை திருட்டு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: இந்த உலகம் முழுக்க கொரோனாவோடு போராடிக் கொண்டிக்க, நம் நாட்டில் மட்டும் தான் கொரோனா நம்மோடு சிக்கிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.
கொரோனாவிலிருந்து பாதுகாக்க பயன்படும் கவச உடையை திருடுவதற்கு முகமூடியாக ஒருவர் பயன்படுத்திய சம்பவம் கடந்த மாதம் நடந்தது. இப்போதோ கவச உடையையை ரெயின்கோட் என நினைத்து போதையில் ஒரு நபர் திருடிச் சென்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
கடையில் இருந்து ஆயிரம் ரூபாய்க்கு அந்த உடையை வாங்கியதாக அந்நபர் பொய் வேறு கூறியிருக்கிறார். ஆனால் கடைசியில் உண்மை கண்டறியப்பட்டு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதோ இந்த 80 வயசு பாட்டியை.. 14 வயசு பையன்.. உச்சக்கட்ட கொடுமை.. அலறி போன அரியலூர்!
ரெயின் கோட்டுக்கு ஆசைப்பட்டு கடைசியில் கொரோனா தொற்றுக்கு ஆளான அந்நபர் தான் தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருள். இதோ அவரைப் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...