ஆர்கே.நகரில் சிக்கி சின்னாபின்னமான சிஆர்.சரஸ்வதியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
ஆர்.கே.நகரில் வாக்கு சேகரிக்க சென்ற சிஆர்.சரஸ்வதி மீது தக்கா, செருப்பு மற்றும் கற்களை பொதுமக்கள் வீசிய தகவல் தீ போல் பரவியதையடுத்து சிஆர்.சரஸ்வதி தாக்கப்பட்டதை வைத்து மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்
சென்னை: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் தொப்பி சேகரிப்பதற்காக சென்றார் சசிகலாவின் தீவிர விசுவாசியான சிஆர்.சரஸ்வதி. அவர் மீது கற்கள் தக்காளி மற்றும் செருப்பு ஆகியவற்றை வீசி தொகுதிக்குள் நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த தகவல் பரவியதையடுத்து நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
கற்களை திரட்டுகிறார்
சிஆர்.சரஸ்வதி தான் கட்டவிருக்கும் புது வீட்டிற்கு தேவையான கற்களை ஆர்கே நகரில் திரட்டிக்கொண்டிருக்கிறார்... கல்வீச்ச எப்படியெல்லாம் சொல்லலாம்னு பாருங்க...
ஈவு இரக்கம் இல்லாம..
மனுஷனா இவங்க ஒரு ஈவு இரக்கம் இல்லாம நடந்துகிறாங்க..ச்சை.. அந்த அளவுக்கு சிஆர்.சரஸ்வதிக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வரவேற்பு கொடுத்துருக்காங்க...
செருப்பு மற்றும் கற்கள் வீச்சு
தொப்பி சின்னத்துக்கு ஓட்டு கேட்டு ஆர்கே.நகர் சென்ற சிஆர் சரஸ்வதி மீது சரமாரியாக செருப்பு மற்றும் கற்கள் வீச்சு...
அம்மா இட்லி சாப்பிட்டாங்க..
ஜெயலலிதா அம்மா இட்லி சாப்பிட்டதை பார்த்தது நான்தான்... சின்னம்மாவின் அடுத்த வாரிசு நான்தான்... சிஆர்.சரஸ்வதி சொல்றதா சொல்லுது இந்த மீம்..