சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி.. இப்டி புலம்ப வச்சிட்டியே பிரியாணி !
சென்னை: புரட்டாசி எப்போது முடியும் கறிச்சோறு சாப்பிடலாம் எனக் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் பரிசாகக் கிடைத்துள்ளது.
வியாழக்கிழமையில் புரட்டாசி முடிந்ததால், பல வீடுகளில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இறைச்சி எடுக்கவில்லை. சரி, தீபாவளிக்கு ஒரு கை பார்த்து விடலாம் எனக் காத்திருந்தால் அதிலும் ஏமாற்றம் தான் பரிசாகக் கிடைத்துள்ளது.
சனிக்கிழமை என்பதால் தீபாவளியன்று பல வீடுகளில் இறைச்சி சமைக்க மாட்டார்கள். தீபாவளியன்று அமாவாசை என்பதால் அன்றும் இறைச்சி நோ. சரி, இன்றாவது சாப்பிடலாம் என்றால், இன்று மகாவீர் ஜெயந்தி.
நாளை மீண்டும் எல்லோரும் வேலைக்கு ஓட வேண்டும் என்பதால், நிதானமாக இறைச்சியை நிம்மதியாக சாப்பிட இயலாது. அதனால் பெரும் ஏமாற்றத்தில் உள்ள அசைவப் பிரியர்கள், தங்களது வருத்தத்தை மீம்ஸாக வெளியிட்டு வருகின்றனர்.
இதோ நமது பங்கிற்கு சில...