யாருய்யா? கட்சிகளை கூட்டணி வச்சி அழிச்சவர கருவேல மரங்களோட கூட்டணி வைக்கும்போது ஜெயில்ல போட்டது?
வைகோ தானாக சிறைக்கு சென்றதை வைத்து கலக்கலான கலாய் மீம்ஸ்கள் இணையதளத்தில் வலம் வருகின்றனர்.
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசத்துரோக வழக்கில் நேற்று கைது தாமாக முன் வந்து சிறை தண்டனையை ஏற்றுக்கொண்டார். தான் சிறைக்கு செல்வதால் யாரும் எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டார்.
வைகோ வாயை திறந்தாலே கலாய்க்கும் நெட்டிசன்கள் இப்படி ஒரு வரலாற்றுச் சம்பவத்தை சும்மாவா விடுவார்கள்? ஓவர் டைம் பார்த்து மீம்ஸ்களை அள்ளி விட்டுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
கருவேல மரத்தை அழிக்க யாரு வருவா?
தமிழ்நாட்டு சிங்கத்தையே கைது பண்ணிட்டிங்களே.. இனி அதிமுக கட்சியை யாரு காப்பாத்துவா?? எப்படி தேர்தல் நடக்கும்?? கருவேல மரத்தை அழிக்க யாரு வருவா?? என கேட்கிறது இந்த மீம்
அதான் காரணமா?
அட வெளியில வெயில் அதிகமா இருக்கும் அண்ணே.. எல்லா ஊர்லயும் வேற தினம் தினம் டெம்ப்ரேட்சர் சதம் அடிச்சிக்கிட்டு இருக்குல்ல. ஜெயில சுத்திதான் மரம் நிறைய இருக்கும். நல்ல இயற்கையான காத்து வரும். அத கொஞ்ச நாள் அனுபவிக்க கூட அவரு விருப்பப்பட்டு இருக்கலாம். அதனலாதான் ஜாமின் வேணாம்னு சொல்லியிருப்பாரு!!!
யாரு ஜெயில்ல போட்டது?
யாருய்யா அது... அரசியல் கட்சிகளை கூட்டணி வச்சி அழிச்சவர கருவேல மரங்கள் கூட கூட்டணி வைக்கும் போது பிடிச்சி ஜெயில்ல போட்டது?? என கேட்கிறது இந்த மீம்..
பெருமையா இருக்கு
இன்னமும் உங்க கட்சியில தொண்டர்கள் இருக்காங்கனு நம்பிக்கையில் இருக்கீங்களே... உங்களை நினைத்தா பெருமையா இருக்கு...!!
நீங்களா சொல்லுங்க
யாரு?? மறியல், போராட்டம் பண்ணுவாங்க?? அட யாரும் பண்ணமாட்டாங்கப்பா! நீங்களா யாரையாவது கூப்பிட்ட பண்ண சொல்லுங்க...