நான் வீட்ல தான் இருக்கேன் எனக்கு ஒரு பய சொல்றானா பாரு..! அன்னையர் தின கலக்கல் மீம்ஸ்!
அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் வீட்டில் உள்ள அம்மாவை மதிக்காமல் பேஸ்புக் டிவிட்டரில் வெறுமனே வாழ்த்து சொல்பவர்களை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் வீட்டில் உள்ள அம்மாவை மதிக்காமல் பேஸ்புக் டிவிட்டரில் வெறுமனே வாழ்த்து சொல்பவர்களை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெட்டி பந்தாவுக்காக சோஷியல் மீடியாக்களில் அம்மா குறித்து உருகிஉருகி பேசுபவர்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை.. அந்த தாய்மையை போற்றும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 14ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் வீட்டில் இருக்கும் தாயை போற்றாமல் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். அதனை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்... அவற்றில் சில..
ஒரு பய சொல்றானா பாரு..
நான் வீட்ல தான் இருக்கேன் எனக்கு ஒரு பய சொல்றானா பாரு... என சொல்கிறது இந்த மீம்
அப்புறம் ஸ்டேட்டஸ் போடலாம்..
பெத்த தாயிக்கிட்ட சாப்பிட்டிங்களா அம்மான்னு ஒரு வார்த்தை கேக்க மாட்டான்! ஆனா பேஸ்புக்லயும் டிவிட்டர்லயும் ஹேப்பி மதர்ஸ் டே மிஸ்யூ மம்னு... ஸ்டேட்டஸ் போடுவான்.. மொதல்ல பெத்த தாயிக்கிட்ட மனம்விட்டு பேசுங்கடா.. அப்புறம் ஸ்டேட்டஸ் போடலாம்...!!
எல்லா தாய்மார்களையும் மதியுங்கள்..
எல்லா தாய்மார்களையும் மதியுங்கள்... மனிதர்களின் தாயை மட்டும்அல்ல... என்ற மதர்ஸ்டே வாழ்த்தை பீட்டாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நடிகை திரிஷாவை வைத்து கலாய்க்கிறது இந்த மீம்...
பேஸ்புக்ல யாருக்கு
வீட்ல இருக்க என்கிட்ட சொல்லாம பேஸ்புக்ல யாருக்கு வாழ்த்து சொல்றீங்கன்னு கேட்கிறது இந்த மீம்...