காக்கை போய் பூனை வந்தது டும் டும் டும்! அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்
மட்டன் பிரியாணி எனக்கூறி சென்னையின் பல இடங்களில் பூனைக்கறி பிரியாணி விற்பனை செய்வது அம்பலமாகியுள்ளது.
சென்னை: மட்டன் பிரியாணி எனக்கூறி சென்னையின் பல இடங்களில் பூனைக்கறி பிரியாணி விற்பனை செய்வது அம்பலமாகியுள்ளதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் பகுதியில் ஹோட்டல்களுக்கு பூனைக்கறி சப்பளை செய்த கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இந்நிலையில் பூனைக்கறி சப்ளை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
|
பிரியாணி சாப்பிடும் போது
சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி விற்பனை - செய்தி #
அடேய் இனிமே பிரியாணி சாப்பிடும் போது எல்லாம் பூனை கறி ஞாபகம் தான்டா வரும்...என்கிறார் இந்த நெட்டிசன்
|
மெனுல சேர்த்து வைங்கடா
அட பாவிகளா பூனை கறியே மெனுல சேர்த்து வைங்கடா ஆட்டுக்கறி திங்க வந்தவன பூனை கறி திங்க வைக்கிறது எல்லாம் அநியாயம்டா.. என்கிறது இந்த டிவிட்
|
பூனை வந்தது டும் டும் டும்
காக்கை போய் பூனை வந்தது டும் டும் டும்! என்கிறார் இந்த வலைஞர்
|
பூனை பிரியாணியா சாப்டீங்க
என்னது கப்பல் வியாபாரி பூனை பிரியாணியா சாப்டீங்க.. என்கிறார் இந்த வலைஞர்