Memes: ஊரடங்கு நீட்டிப்பு.. கடை திறக்கலாம்.. மக்களும் போலாம், வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா இருக்கும்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு இருந்தாலும் மக்கள் எங்கும் போகலாம், வரலாம், ஊரடங்கும் ஒரு ஒரமா இருக்கும் என நெட்டிசன்கள் ட்வீட்டரில் அதகளப்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
அந்த மீம்ஸ்களில் ஒரு சிறு தொகுப்பை வாசகர்களின் பார்வைக்காக தொகுத்துள்ளோம்.
OTT App: இயக்குநர் கவுதம் மேனனா? நம்பவே முடியலையே...!
தந்தூரி சிக்கன்
ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் கொடுத்த கொரோனா நோயாளிகள்
என்னப்பா இவனுக.. கொரோனா ட்ரீட்மென்ட்க்கு போன இடத்துல தந்தூரில்லாம் ஆர்டர் பண்ணி கொண்டாடுறானுக...
ஊரடங்கும் ஒரு ஓரமா
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஆனால் கடைகள், டாஸ்மாக்குகள், வங்கிகள், அலுவலகங்கள் திறந்திருக்கும். மக்கள் எங்கும் போகலாம் வரலாம்.. ஊரடங்கும் ஒரு ஓரமா நடைபெறும்.
ஷேர் ஆட்டோ
ஆட்டோ ஓட்ட அனுமதி கொடுத்து இருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். ஆனால் ஒரு பயணி மட்டும்தான் கூட்டிட்டு போனும்னா எப்படிங்க. அய்யா எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு "SHARE AUTO".
மதுப்பிரியர்
டீக்கடையில் டீ குடிப்போர் சங்கம்
சாரே ஒரு மதுப்பிரியர் சரக்கு வாங்கி வீட்ல வச்சு அடிச்சா கிக் ஏறலாம் சாரே...
ஆனால் இந்த டீப்பிரியர் டீ வாங்கி வீட்டுக்கு வந்து குடியின் கிக் இருக்காது சாரே..
கவலைப்படாதே
எனக்கு கொரோனா வந்தா என்ன விட்டுட்டு போய்டுவீங்களா
எங்க போறது உனக்கு வந்தா அடுத்து என்னதான் தூக்குவானுங்க. கவலைப்படாதே பக்கத்து வார்டுல தான் நான் இருப்பேன்.