பல்லி கூட பேசறது கூட பரவாயில்லை.. எறும்பு எங்க போகுதுனு அதை பாலோ பன்றான்!.. ஊரடங்கு பரிதாபங்கள்
சென்னை: பல்லி கூட பேசறது கூட பரவாயில்லை. எறும்பு எங்கே போகுதுனு அதை பாலோ செய்து கொண்டே போகிறான் என ஊரடங்கு உத்தரவில் வீட்டில் இருப்போரின் நிலை குறித்து அழகாக விளக்குகிறது இந்த மீம்ஸ்கள்.
Recommended Video
கொரோனா பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு யோசனைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடையுத்தரவு போடப்பட்டதால் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருப்போர் புதிய கண்டுபிடிப்புகளை பிடித்த வண்ணம் உள்ளனர்.
ஒன்றுபட்டால் வாழ்வு
அன்று கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, இன்று கூடி வாழ்ந்தால் கொரோனாவுக்கே நன்மை
அன்று ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இன்று ஒன்றுபட்டால் உண்டு சாவு
மச்சான்
சின்ன மச்சான் சாங்ல 81 மச்சான், 67 சொல்லு புள்ள, வருது.
பெரிய சீப்பு- 96 பல், சின்ன சீப்பு- 50 பல், பேன் சீப்புல 84 பல், கைப்பிடிச் சீப்பு- 30 பல் செக் செய்துக்கோங்க.
51 பின் இருக்கு
ஊரடங்கு இரண்டாம் நாள்
என்னுடைய இன்றைய கண்டுபிடிப்பு
இதில் (ஸ்டேபிளர் பின்) மொத்தம் 51 பின் இருக்கு.
பேஸ்புக்
அரிசி மூட்டையை பிரிச்சு என்னடா பன்ற
ஒரு மூட்டைல எத்தனை அரிசி இருக்குன்னு எண்ணுறேன். ஃபேஸ்புக்ல போஸ்ட் போடனும்.
ஒரு நிமிஷம்
ஃபேன் ஆப் பண்ணா முழுசா நிக்க ஒரு நிமிஷம் 8 செகண்ட் ஆவுது. இது டே 1 கண்டுபிடிப்பு.
எறும்பு
என் பேரு வினோ , உன் பேரு என்ன? ஓ பல்லியா. அது கூட பரவாயில்லைங்க வீட்ல இருக்குற எறும்பு பின்னாடியே போய் அது எங்க போகுதுனு பாக்கறான் இந்த லூசு.
விளக்குமாறு குச்சி
உன் பையன் விளக்குமாறு குச்சிய எண்ணிக்கிட்டு இருக்கான்டி.
20 வெங்காயம்
எங்க அம்மா வாங்கிட்டு வர சொன்ன 1 கிலோ சின்ன வெங்காயத்தில் இருந்தது 58 வெங்காயம். அதுல சிங்கிளா இருந்தது 21 வெங்காயம், டபுளா இருந்தது 20 வெங்காயம், டிரிப்பிளா இருந்தது 17.