Memes: நாளைக்கு குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா போலீஸ் ஊத சொல்ல மாட்டாங்கல்ல?.. கொரோனா பயமிருக்குமில்ல!
சென்னை: தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் பின்னி பெடலெடுக்கின்றன.
Recommended Video
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் கோவையில் உள்ள ஒரு கடையில் வாழைமரத் தோரணம் எல்லாம் கட்டி ஹோமகுண்டம் வளர்த்த கதையெல்லாம் நடந்திருக்கு!
அந்த அளவுக்கு குடிமகன்களை ஈர்க்க டாஸ்மாக் கடைகள் தயாராகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் இதுகுறித்த மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. இந்த மீம்ஸ்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்படியாக உள்ளது. அவற்றுள் உங்களுக்காக சில....
Memes: என்னாது மாஸ்க்கா.. டாஸ்மாக் போய்ட்டு வர்றவன் இடுப்புக்கு கீழே கைலியே நிக்காதே!
கொரோனா பயம்
நாளைக்கு குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா போலீஸ்காரங்க ஊத சொல்ல மாட்டாங்க இல்லடா..
பின்ன அவங்களுக்கும் கொரோனா பயம் இருக்குமில்ல!
ஃபுல் வாங்கிட்டு வரவா
தம்பி என்னப்பா ஊருக்குள் வெடி வெடிக்கறாய்ங்க..
7-ஆம் தேதி டாஸ்மாக் ஓபன் பன்ன போறாங்களாம்..
உங்களுக்கு ஒரு ஃபுல் வாங்கிட்டு வரவா...
அதுக்கு ஏன்டா கத்துற என் பொண்டாட்டி காதுல விழுந்திருச்சினா
அவ என்னைய போட்டு மிதிப்பா!
10 மணிக்கு
"உச்சி வெயில்ல எங்க கண்ணு கிளம்பிட்ட?"
"பத்து மணிக்கு நீங்க எங்க போனீங்களோ அங்க"
|
குடிமகன்கள் கொண்டாட்டம்
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறப்பு, குடிமகன்கள் கொண்டாட்டம் என மாமன் மகன் படத்தில் வரும் சத்யராஜ்- கவுண்டமணி காமெடியை குறிப்பிடுகிறார் இந்த வலைஞர்.