எஸ்கேப் மன்னன் ஸ்டைல் சேகரின் தலைமறைவு விழாவுக்கு வாழ்த்தும் அண்ணனின் விழுதுகள்
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த எஸ்வி சேகர் தலைமறைவாக இருப்பது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
Recommended Video
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ்வி சேகர் கைது நடவடிக்கைக்கு பயந்து எங்கேயோ ஒளிந்து கொண்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆளுநர் செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் லேசாக தட்டினார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு ஆளுநர் வருத்தமும் தெரிவித்தார்.
எனினும் அதை அந்த பெண் பத்திரிகையாளர் ஏற்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து எஸ் வி சேகர் , தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் நிருபர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து விட்டு கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு தற்போது தலைமறைவாக உள்ளார்.
|
பேர் சொன்னதும் விட்டுடாங்க
லைசென்ஸ் இல்லாம ப்ரெண்டு மாட்டிக்கிட்டான்.. பேரு கேட்டிருக்காங்க.. எஸ்.வி.சேகருன்னு சொல்லியிருக்கான்.. சார் போங்கன்னு விட்டுட்டாங்களாம்.
ஸ்டைல் சேகர் 50-ஆவது நாள் தலைமறைவு விழாவை கொண்டாடும் எஸ்வி சேகர். 100-ஆவது நாள் தலைமறைவு விழாவை கொண்டாட வாழ்த்துக்கள். |
அண்ணனின் அடிவிழுதுகள்
ஸ்டைல் சேகர் 50-ஆவது நாள் தலைமறைவு விழாவை கொண்டாடும் எஸ்வி சேகர். 100-ஆவது நாள் தலைமறைவு விழாவை கொண்டாட வாழ்த்துக்கள்.
|
கிரிமினல் அல்ல
முழு பலத்தை பிரயோகித்து பிடிக்கும் அளவுக்கு எஸ்.வி.சேகர் கிரிமினல் அல்ல - அமைச்சர் பாண்டியராஜன்
|
பெரிய தொழில் அதிபர்
மல்லையா, நிராவ் மோடில்லாம் எவ்வளவு பெரிய தொழில் அதிபரா இருந்து என்ன பிரேஜனம் S.v. சேகரிடம் நிறைய கத்துக்கனும்.
|
ஒருத்தரும் அசைக்கமுடியாது
தமிழ்நாட்டு சி.எம், எக்ஸ் சி.எம் இவங்களுக்கெல்லாம் பிடிவாரன்ட் வந்த பத்தே நிமிஷத்துல அர்ரெஸ்ட் பண்ணிடுவாங்க ஆனா நம்ம லெஜன்ட் S.V.சேகர ஒரு பய நெருங்க முடியாது.. :p