"யாருண்ணே நீயி.. தியேட்டருக்குள்ள நாவலோட வந்திருக்க.." பொன்னியின் செல்வன் மீம்ஸ் அலப்பறைகள்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக படமாக்கப்பட்டு வந்தது. இது நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் கல்கியின் காவியம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
மிகப் பெரிய காவியமான இதை, மணி ரத்னம் எப்படி எடுத்திருந்திருப்பார் என்ற ஆவலும் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. அதை விட முக்கியம், நடிகர், நடிகைகளுக்கு மணிரத்னம் அளித்த கேரக்டர்களுடன் அவர்கள் ஒன்றி இருக்கிறார்களா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் இந்த படம் குறித்த மீம்ஸ்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றை குறித்து காண்போம்.
பொன்னியின் செல்வன் ரசிகர்களை பதறவைத்த தியேட்டர்.. 'பாலில் பூச்சிகளே.. தீயரி எசமாரி..’ அதிரடி ரெய்டு!
தியேட்டர்
யாருணே நீ தியேட்டருக்கு புக்கோட வந்துருக்க படத்துல உள்ள கதையும் இந்த புக்குல உள்ள கதையும் சரியா இருக்கான்னு செக் பண்ணதான்.
புக்குல இல்லையே
No Smoking ad : நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
PS1 Book readers- அப்படிலாம் எதுவும் புக்குல இல்லையே
பேஜ் நம்பர் இல்லையே
புக்குல பேஜ் நம்பர்ஸ் இருந்துச்சி பட்படத்துல காணோமே
சம்பளம் எப்போ
பொன்னியின் செல்வன் பார்த்தியா இல்ல நானே வருவேன் பார்த்தியா மாப்ள
நானே சம்பளம் எப்போ வரும்னு பார்த்துட்டு இருக்கேன் நீ வேற ஏன்டா
தியேட்டர்ல
டேய் யார்டா நீ தியேட்டர்ல இருட்டுக்குள்ள உக்காந்து செல்போன் லைட்ட வச்சு பொன்னியின் செல்வன் புக்கு படிச்சிகிட்டு இருக்க!
ஜெராக்ஸ்
சார் புக் கிடைக்கலைன்னு ஜெராக்ஸ் எடுத்துட்டு போய்ட்டு இருக்கானுங்க! இப்படியாக மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சினிமா பைத்தியம்
"எங்க வொர்க்னு கேட்டா, யாம் சோழ தேசம் நோக்கி பயணிக்க உள்ளோம்னு சொல்றான் சார்.. தஞ்சாவூர் வொர்க்தான் அப்படி சொல்றான், சினிமா பைத்தியம் சார்." இப்படி இருவர் பேசிக்கொள்வதை போல சித்தரிக்கிறது இந்த மீம். ஏன்னா இப்போல்லாம் தஞ்சாவூர் பக்கம் போற பசங்கல்லாம் இப்படித்தான் கெத்தா சொல்லிட்டு சென்னையிலிருந்து கிளம்புவதாக முறைத்தபடியே சொல்கிறார்கள் மற்ற ஊர் பிரண்ட்ஸ்.