அரசு செயல்படலைனு எவன்யா சொன்னது? இங்க பாருங்கப்பா.... நெட்டிசன்ஸ் ஆங்ரி! #WhoKilledRaghu
கோவையில் சாலையில் எழுதப்பட்டிருந்த ஹூ கில்டு ரகு வாசகம் அழிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
Recommended Video
கோவை: சாலையில் எழுதப்பட்டிருந்த ஹூ கில்டு ரகு வாசகம் அழிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
கோவை அவினாசி சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவால் ஏற்பட்ட விபத்தால் ரகு என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ரகுவின் உறவினர்கள் ஹூ கில்டு ரகு என்ற வாசகத்தை சாலையில் எழுதினர். இந்த வாசகம் இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
|
நடு ரோட்டுல பேனர்
மக்களாகிய நாம் அனைவரும் காரணம் தான் .. நடு ரோட்டுல பேனர் வச்சா தட்டி கேளு .. எவன் வைக்கானு பார்ப்போம்...
|
மறுக்கப்பட்ட நீதி
அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்
|
எவ்ளோ விரைவா?
அரசு செயல்படலைனு எவன்யா சொன்னது? எவ்ளோ விரைவா செயல்பட்டிருக்காங்க பாருங்க...
|
இப்படிக்கூட சொல்லிடுவாங்க
விட்டா லாரி நின்னுட்டு இருந்தது.. ரகுதான் பைக்க கொண்டு போயி இடிச்சி ஆக்ஸிடெண்ட் பண்ணாருன்னுவானுங்க போல
|
தமிழரின் முக்கியமான பண்பாடு
யாரோ ஒருவர் வீட்டில் இழவு விழும்வரை, சகட்டுமேனிக்கு அரசாங்கமே விதிமீறலை செய்வதும், ஏதும் செய்ய இயலாமல் மக்கள் குமுறுவதும், தமிழரின் முக்கியமான பண்பாடு.
|
ஓர் உயிரை சிதைத்து விட்டது
திறனற்ற அரசு அதிகாரிகளின் அலட்சியம் ...
ஓர் உயிரை சிதைத்து விட்டது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
விலை ஓர் உயிர் ..!!!
தங்களின் சுய விளம்பரத்திற்கு விலை ஓர் உயிர் ..!!! என்கிறது இந்த டிவிட்