பெரிய பூட்டு இருந்தா எடுத்து போட்டு பூட்டிட்டு போவியா..! தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!
ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்ததை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.
சென்னை: ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்ததை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் இனி உளுத்தம் பருப்பு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உளுந்து வழங்கப்படாது என்ற அறிவிப்பை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள். அவற்றில் சில..
|
சொல்லவே இல்லையேடா
என்னது ரேஷன்ல உளுந்து குடுத்தாய்ங்களா சொல்லவே இல்லையேடா... என்கிறார் இந்த வலைஞர்
|
மாத்த செய்யும் முயற்சியோ?
ரேஷன்ல உளுந்து போடாதது ஒரு வேளை தமிழ்நாட்டை சாப்பாத்திக்கு மாத்த செய்யும் முயற்சியோ? என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
உளுந்து சப்ளை நொண்டுது
ஜெ.வுக்கு உடம்பு சரியில்லாம போனதுலேயிருந்தே உளுந்து சப்ளை நொண்டுது.. என்கிறார் இந்த வலைஞர்
|
இல்லாம போகபோவுதே..
ரேசன்ல இனி உளுந்து இல்லன்னதுக்காகவே பொங்குறாங்க... நாளைக்கு ரேசனே இல்லாம போகபோவுதே அதுக்கு என்ன பண்ணப்போறீங்க...? என கேட்கிறது இந்த டிவிட்
|
ஆம்லெட், உளுந்து வடை வேண்டாம்
உளுத்தம் பருப்பு ரேஷனில் கிடையாது , சின்ன வெங்காயம் விலை உயர்வு.. செய்தி..
இனிமே சைடிஸ்க்கு ஆம்லெட், உளுந்து வடை வேண்டாம்.... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்
|
இப்ப தான் வெளியே வருது
யோவ் ரேஷன்ல உளுந்து போட்டு ஒரு வருஷம் ஆக போதுயா நியூஸ் இப்ப தான் வெளியே வருது.. என்கிறார் இந்த வலைஞர்
|
இழுத்து மூட போறீங்களா
இப்ப உளுந்து நிறுத்த போறீங்க... அடுத்து ரேஷன் கடையை இழுத்து மூட போறீங்களா.... என கேட்கிது இந்த டிவிட்
|
சென்னையில் போட்டிருப்பார்களோ!
நாங்க உளுந்து வாங்கி 3 வருஷத்துக்கு மேல் ஆச்சி. ஒருவேளை சென்னையில் போட்டிருப்பார்களோ! என்கிறார் இந்த வலைஞர்
|
பூட்டிட்டு போவியா..
இனி ரேஷன் கடைகளில் உளுந்து கிடைக்காது
#தமிழக_அரசு
பெரிய பூட்டு இருந்தா எடுத்து போட்டு பூட்டிட்டு போவியா, அது கிடைக்காது இது கிடைக்காதுன்னு சொல்லிக்கிட்டு.. என மரண கலாய் கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..