வடக்கில் தலை வைத்து படுத்தால் வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க.. இப்பதான் புரியுது!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை சமூக வலைதளங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை சமூக வலைதளங்களில் மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதேநாளில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால் மக்கள் கையில் பணமிருந்தும் அதனை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை பாஜகவினர் கறுப்பு பண ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதனை கிண்டலடித்து வருகின்றனர்.
|
இப்பதான் புரியுது!!
வடக்கில் தலை வைத்து படுத்தால் வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க.. இப்பதான் புரியுது!! என்கிறார் இந்த வலைஞர்
|
நாசமாக்கிய நாள்..
நடுராத்தியில் நாட்டை நாசமாக்கிய நாள் இன்று.. என்கிறது இந்த டிவிட்
|
சாத்தியமற்றதே..
ஒரு பெரும் தோல்வியை வெற்றியென்று விளம்பரப்படுத்த அருமையான பேச்சாற்றல் கொண்டவர்களால் முடியும்யுமென நினைப்பது சாத்தியமற்றதே... என்கிறார் இந்த நெட்டிசன்
|
இந்தியாவின் 8/11
அமெரிக்காவுக்கு 9/11 அதற்கு சற்றும் சளைத்தது அல்ல இந்தியாவின் 8/11..... என்கிறார் இந்த வலைஞர்..
|
பிச்சைக்காரனாய் மாறிய நாள்
ஏடிஎம் வாசலில் சாமானிய மனிதன் அனைவரும் சில்லரைக்காக பிச்சைகாரனாய் மாறிய தினம்... என்கிறது இந்த டிவிட்