கருப்பு பணத்தை கைப்பற்றுவோம் என்று கூறி கருப்பாயின் சுருக்கு பணத்தை கைப்பற்றிய நாள்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அதனை கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் நெட்டிசன்கள் அவற்றை கலாய்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் பெரும் துயரமடைந்தனர்.
இந்த சம்பவம் அரங்கேறி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..
|
கருப்பாயின் சுருக்கு பணத்தை
கருப்பு பணத்தை கைப்பற்றுவோம் என்று கூறி கருப்பாயின் சுருக்கு பணத்தை கைப்பற்றிய நாள்.. என்று கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
வௌக்கமாத்தை எடுத்த நாள்
வெள்ளிப்பூட்டை உடைத்து வெளக்கமாத்தை எடுத்த நாள் இன்று! என்கிறது இந்த டிவிட்
|
இருப்பை இருளில் தள்ளிய நாள்
கறுப்பை கண்டுபிடிக்கிறேன்னு சொல்லி இருப்பை இருளில் தள்ளிய நாள்... என்கிறார் இந்த டிவிட்
|
பரிதவித்த நாள்
பணம் இருந்தும் இல்லாமல் பரிதவித்த நாள் இன்று... என்று நினைவு கூர்கிறார் இந்த நெட்டிசன்
|
தெரு தெருவா அலைச்சல்
பழைய 500, 1000 ரூபாய் நோட்ட கையில வச்சிக்கிட்டு தெரு தெருவா அலைஞ்சிட்டு இருந்தேன்.. என்கிறது இந்த மீம்..