இந்த டைம்ல அன்னத்தில் கை வைப்பனே தவிர, யார் கன்னத்திலேலயும் கை வைக்க மாட்டேன்! நெட்டிசன்ஸ் ரகளை!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக பாதியிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பறக்கின்றன.
Recommended Video
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக பாதியிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பறக்கின்றன.
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கக்கோரி கடந்த மாதத் 17ஆம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் 2 நாட்கள் கடந்த நிலையில் பாதியிலேயே தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஜீயர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜீயர் இன்றும் பாதியிலேயே உண்ணாவிரதத்தை திரும்ப பெற்றார். இதனை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்
|
பசி எடுத்ததும்
#ஜீயர் இருந்தது சாப்பிடும் வரை உண்ணாவிரதம்.
பசி எடுத்ததும் உண்ணாவிரதத்த முடிச்சிக்குவாரு... என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
ஜீயரே சொன்னார்..
எஸ் வி சேகரும் எச் ராஜாவும்
கேட்டுக்கொண்டதுக்கு இணங்க....உண்ணாவிரதம் வாபஸ்....
யார் சொன்னா?
ஜீயரே சொன்னார்!!!
அப்ப சரி...அப்பசரி... என கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
கன்னதில் கை வைக்கமாட்டேன்
உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் - செய்தி #
மதியம் 3 மணி இந்த டைம்ல அன்னத்தில கை வைப்பனே தவிர யார் கன்னத்திலயும் கை வைக்க மாட்டேன்... என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
|
கலைஞர் மாதிரி
பேசாம #ஜீயர் திமுக'ல சேரலாம்,கலைஞர் மாதிரி அரை நாள் உண்ணாவிரத நாடகத்தை சிறப்பா நடத்தறார்.. என்கிறார் இந்த வலைஞர்