அப்போ இவ்வளவு நாள் மசாலா தான் தடவிட்டு இருந்துச்சா??
தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளதை வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: தமிழகத்தில் இன்று கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 28ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. 110 பாரன்ஹீட்டுக்கு மேல் வாட்டி வதைத்து வரும் வெயிலால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள கத்திரி வெயிலால் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
ஓவராதான் போறோமோ..
கொஞ்சம் ஓவராதான் போறோமோ... போவோம் என்ன பண்ணிருவானுங்க..?? என சூரியன் கேட்பது போல் கலாய்க்கிறது இந்த மீம்
|
அப்போ இவ்வளவு நாள்?
அப்போ இவ்வளவு நாள் மசாலா தான் தடவிட்டு இருந்துச்சா?? என இத்தனை நாள் வெளுத்த வெயிலை கேட்கிறது இந்த மீம்
|
விண்டர் இஸ் கம்மிங்காம்..
அக்னி நட்சத்திர வெயில் பல்லை காட்டிகிட்டு அடிச்சிக்கிட்டு இருக்கு, விண்டர் இஸ் கம்மிங்காம்... என கொளுத்தும் வெயிலை வேதனையுடன் கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்
|
சேம்பிலா..
இதுவரைக்கும் வந்தது சேம்பிலா... என கேட்கிறார் இந்த நெட்டிசன்ஸ்...
|
அப்புறம் பனிமழைதான்
ஆமாம் அப்புறம் பனிமழைதான்.... என நக்கலடிக்கிறார் இந்த வலைஞர்...