டிஸ்கவரி சேனல்ல வர பியர் க்ரில்ஸ்கே டஃப் கொடுப்பாரு போலயே..! ஜெயக்குமாரை வாரும் நெட்டிசன்ஸ்!
நண்டு விடும் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிங்கம் புலியவே பார்த்த எங்களுக்கு நண்டை பார்த்து பயமில்லை என்றார்.
சென்னை: சிங்கம் புலியவே பார்த்த எங்களுக்கு நண்டை பார்த்து பயமில்லை என்ற அமைச்சர் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் வாரி வருகின்றனர்.
தனது வீட்டின் நண்டு விடும் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிங்கம் புலியவே பார்த்த எங்களுக்கு நண்டை பார்த்து பயமில்லை என்றார். அமைச்சரின் இந்த பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
இந்நிலையில் இதனை வைத்து அமைச்சர் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் வாரி வருகின்றனர். அவற்றில் சில..
|
தில்லை பார்த்தியா
புலி,கரடி,சிங்கத்துடன் வாழ்ந்த நான் நண்டுக்கு பயப்படமாட்டேன்-அமைச்சர் ஜெயக்குமார்
எங்க தலைக்கு தில்லை பார்த்தியா...
|
நண்டுகளை என்ன செய்தார்கள்?
அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட்டவர் கைது நண்டுகளை என்ன செய்தார்கள் ?
|
டஃப் கொடுப்பாரு போல
புலி,கரடி,சிங்கத்துடன் வாழ்ந்த நான் நண்டுக்கு பயப்படமாட்டேன்-அமைச்சர் ஜெயக்குமார்
டிஸ்கவரி சேனல்ல வர பியர் க்ரில்ஸ்கே டஃப் கொடுப்பாரு போலயே..
|
சரணாலயமா இருக்கும் போல
புலி,கரடி,சிங்கத்துடன் வாழ்ந்த நான் நண்டுக்கு பயப்படமாட்டேன்-அமைச்சர் ஜெயக்குமார்
ஒருவேளை இவரோட பூர்வீகம் வண்டலூர் வனவிலங்குகள் சரணாலயமா இருக்கும் போல.
|
ஜூல வேலை பார்த்திருப்பாரோ
சிங்கம், புலியெல்லாம் பார்த்திட்டுதான் அரசியலில் வந்திருக்கேன்: ஜெயக்குமார்
ஜூ ல வேலை பார்த்திருப்பாரோ..!
|
கே டிவியா?
சிங்கம், புலியெல்லாம் பார்த்திட்டுதான் அரசியலில் வந்திருக்கேன்: ஜெயக்குமார்
தமிழ் ராக்கர்ஸ்ல பார்த்தாரா இல்ல கேடிவில பார்த்தாரா.......
|
பாம்பை விட்டாத்தான்..
அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில்
நண்டு விடும் போராட்டம் நடத்திய பெண்
கைது.
ஹாஹா.... இது புதுசா இருக்கே!
நண்டு விடுவதெற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்..
#ஜெயக்குமார்.
பாம்பை விட்டாத்தான் பயப்படுவாரோ?
|
ஜெமினி சர்க்கஸ்ல..
புலி, கரடி, சிங்கத்துடன் வாழ்ந்தவன் நான் நண்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் - அமைச்சர் ஜெயக்குமார் #
ஜெமினி சர்க்கஸ்ல வேலை பார்த்து இருப்பாரோ..