மாட்டுக் கறியில் ஏகப்பட்ட புரதச் சத்து இருக்குதப்பு.. நெட்டிசன்ஸ் அதகளம்!
அமைச்சர்கள் மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுக்கோமியம் சிறந்த கிருமி நாசினி என கூறி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: அமைச்சர்கள் மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுக்கோமியம் சிறந்த கிருமி நாசினி என கூறி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ வாசலில் மாட்டுச்சாணம் தெளித்தால் டெங்கு வராது என நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் கே.பி.அன்பழகன் மாட்டுக் கோமியம் கூட சிறந்த கிருமி நாசினிதான் என கூறியுள்ளார்.
இதனை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
ஏகப்பட்ட புரதச்சத்து
மாட்டுக் கறியில் ஏகப்பட்ட புரதச் சத்து இருக்குதப்பு.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
அறிக்கையா வருதே
கடந்த இரண்டு மூன்று நாளா தமிழகத்தில் ஒரே மாட்டுச்சாணம்,மாட்டு கோமியம்னு அறிக்கையா வருதுதே..எதுவும் இரவோடு இரவாக ஆட்சி மாறிடுச்சா.. என கேட்கிறார் இந்த வலைஞர்
|
கொல்லப்புறம் வழியா வந்தா..
அதெல்லாம் இருக்கட்டும் வாசல் வழியா வராம கொல்லப்புறம் வழியா வந்தா என்ன பண்றது.. என கேட்கிறார் இந்த வலைஞர்
|
டெங்கு வராதாம்..
சோப் போட்டாலும் டெங்கு வராதாம் - அமைச்சரவை முடிவு.. என கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
எங்கே தெளிப்பது
பல பேருக்கு வாசல் இல்லை சாணம் கோமியம் எங்கே தெளிப்பது,,,? என கேட்கிறது இந்த டிவிட்