இந்த போட்டியிலேயே தோத்து போயிறனும்.. சாமி கும்பிடும் பாக். வீரர்கள்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் மோதி வரும் பாகிஸ்தானை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
கார்டிஃப்: சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி வரும் பாகிஸ்தானை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இன்றே தோற்றுப் போனால் இந்தியாவுடன் மோதும் போட்டியில் இருந்து தப்பித்து விடலாம் என பாகிஸ்தான் வீரர்கள் சாமி கும்பிடுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதலில் பேட் செய்யும் இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது.
நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ்ம் இந்தியாவும் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடும் பாகிஸ்தானை ஓட்டி வருகின்றனர் நெட்டிசன்ஸ்..
|
கிட்ஸ், ஆண்கள், லெஜன்ட்ஸ்..
பைனலில் இங்கிலாந்துடன் இந்தியா விளையாட வேண்டும் என குழந்தைகள் விரும்புகிறார்கள்.. இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் ஆண்கள் விரும்புகிறார்கள்... லெஜன்ட்ஸ் பாகிஸ்தானும் பங்களாதேஷ்ம் விளையாட வேண்டும் என விரும்புகிறார்கள்...
|
10% மட்டும் தான்
அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 90% வெற்றி வாய்ப்பும் பாகிஸ்தானுக்கு 10% வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார் இந்த நெட்டிசன்..
|
சிங்கமும் ஆடும்
சாம்பியன் ட்ராபி அரையிறுதியில் சிங்கம் ஆட்டுடன் மோதுவதாகவும் புலி பசுவுடன் மோதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்..
|
மீண்டும் தோற்க வேண்டாம்
இன்றைய போட்டியிலேயே தோற்றுவிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொழுகை.. அப்பாவிடம் மீண்டும் தோற்க வேண்டாம் என்பதற்காக... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நல்ல கேள்வி
ரிப்போட்டர்: இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா?
சர்ஃபாரஸ் அகமது: நல்ல கேள்வி, நீங்கள் நல்ல கேள்வி கேட்டீகள்.. அடுத்த கேள்வி ? என கேட்பது போல் கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்..
|
அப்பாவுடன் ஆட்டம்
இந்த குழந்தைகள் இன்று வெற்றி பெற்றால் அடுத்த போட்டியில் அவர்களின்(இந்தியா) தந்தையுடன் விளையாடுவார்கள்... என கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு இந்தியா அப்பா என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்...