கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள அஞ்சு நாள் ஓடிப்போச்சே.. #சசிகலா
சசிகலா சிறைக்கு திரும்பியது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: சசிகலா சிறைக்கு திரும்பியது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள கணவர் நடராஜனை காண 5 நாட்கள் பரோலில் வெளியே வந்திருந்தார் சசிகலா. பரோல் முடிந்ததை அடுத்து அவர் மீண்டும் நேற்று சிறையிலடைக்கப்பட்டார்.
சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கி விட்டனர். அவர்களின் கருத்துக்களில் சில..
|
சும்மா விடாது பாத்துக்குங்க
தியாகத்துருவம் சின்னம்மா தீபாளி துனிமனி எடுக்க விட்டீங்களடா, இந்த பாவம் சும்மா விடாது பாத்துக்குங்க! என கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்..
|
சென்றதும் தெரியவில்லை
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இப்படி சிந்தித்திருக்கிறேன். சசிகலா; வந்தது தெரிந்தது, இருந்தது தெரியவில்லை, சென்றதும் தெரியவில்லை...! என கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
திரும்பினார் பன்னீர்ச்செல்வம்
பெங்களூரு சிறைக்கு சென்றார் சசிகலா.. தமிழ்நாடு திரும்பினார் பன்னீர்ச்செல்வம்.. என்கிறது இந்த டிவிட்
|
தீபாவளி ஷாப்பிங்
5 நாள்கள் பரோல் முடிந்து பெங்களூர் சிறை திரும்புகிறார் சசிகலா சிறைக்கு போகுதா இல்லை தீபாவளி ஷாப்பிங் போகபோதோ யாருக்கு தெரியும் என்கிறது இந்த டிவிட்..
|
டைமிங் சாங்
5 நாள்கள் பரோல் முடிந்து சிறை திரும்புகிறார் சசிகலா போறாளே பொண்ணுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் மண்ணும் தந்த ஊர விட்டு.. என் டைமிங் பாடலை பாடுகிறார் இந்த நெட்டிசன்..
|
அடுத்தது பொங்கல் தான்
#பரோல்முடிந்து பெங்களுர் சிறைநோக்கி செல்கிறார் #சசிகலா #அடுத்தது பொங்கல் தான் என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்..
|
அஞ்சு வருடம் மாதிரில..
கண்ணை மூடி கண்ணை திறக்கறதுக்குள்ள அஞ்சு நாள் ஓடிப்போச்சே -சசிகலா அஞ்சு நாளும் அஞ்சு வருடம் மாதிரில நகர்ந்துச்சு-எடப்பாடி #மைண்ட்வாய்ஸ் என கலாக்கிறது இந்த டிவிட்..