அண்ணே இந்த மாதிரி ஆய்வயெல்லாம் எங்கருந்துணே செய்வ.. செம்ம!
அமைச்சர்கள் மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுக்கோமியம் சிறந்த கிருமி நாசினி என கூறி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: அமைச்சர்கள் மாட்டுச் சாணம் மற்றும் மாட்டுக்கோமியம் சிறந்த கிருமி நாசினி என கூறி வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ வாசலில் மாட்டுச்சாணம் தெளித்தால் டெங்கு வராது என நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் கே.பி.அன்பழகன் மாட்டுக் கோமியம் கூட சிறந்த கிருமி நாசினிதான் என கூறியுள்ளார்.
இதனை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
நோய் எதிர்ப்பு சக்தி
வீட்டு வாசலில் சாணம் கரைத்து தெளித்தால் டெங்குவை தடுக்கலாம் #செல்லூர் ராஜூ கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது #கேபி அன்பழகன்.. என இரண்டு அமைச்சர்கள் பேசியதையும் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த நெட்டிசன்..
|
எதுக்கு இத்தனை கோடி
மாட்டு சாணம் வாங்க எதுக்குடா இத்தனை கோடி..! என கேட்கிறது இந்த டிவிட்
|
சன்னல் வழியாக வந்தால்?
வாசல் வழியாக வருவதற்கு அது என்ன விருந்தினரா? அது சன்னல் வழியாக வந்தால்? என்ன செய்வது என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
அடுத்தக்கட்ட அறிவிப்பு
வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது: செல்லூர் ராஜு..
அடுத்தகட்ட அறிவிப்பு விமானம் மூலம் தமிழ்நாடு முழுதுவதும் தெளிக்கப்படும்? என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
|
எங்கருந்துணே செய்வ..
அண்ணே இந்த மாதிரி ஆய்வயெல்லாம் எங்கருந்துணே செய்வ....செம்ம... என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்