தியேட்டர் கட்டண கொள்ளை.. பைரசியில் படம் பார்க்க மக்களை பிடித்து தள்ளுகிறார்கள்.. நெட்டிசன்ஸ் குமுறல்
தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வால் இனி வீட்டிலேயே ரிலாக்ஸ் செய்துகொள்ளளலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: தியேட்டர்களின் கட்டண உயர்வால் திருட்டு விசிடி மற்றும் ஆன்லைனில் படம் பார்ப்பவர்களின் எண்ணிகை அதிகரிக்கும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் 25% வரை திரையரங்க கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள், திரையரங்குகளின் கட்டண உயர்வால் தமிழ் ராக்கர்ஸ் போன்ற வெப்சைட்டுகளை
பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். டிக்கெட் விலையை உயர்த்திருப்பதன் மூலம் திருட்டுதனமாக படம் பார்க்க அரசே தங்களை கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
|
எங்களை கட்டாயப்படுத்துகிறீர்கள்
திருட்டு விசிடியில் படம் பார்க்க எங்களை கட்டாயப்படுத்துகிறீர்கள் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நடுத்தர மக்களால் முடியாது
இனி நடுத்தர மக்கள் சென்னையில் திரைப்படம் பார்க்க முடியாது.. என்கிறது இந்த டிவிட்
— Parthipan Thangavelu (@PARTHIPAN_CT) October 7, 2017 |
ஆன்லைன்லயே பார்த்துக்கொள்கிறோம்
பரவாயில்லை சார் நாங்க ஆன்லைன்லயே பார்த்துக்கொள்கிறோம் என்கிறது இந்த மீம்..
|
பாத்துக்கிட்டே இருங்க
இன்னும் என்னென்ன செய்ய போறங்கன்னு பார்த்துக்கிட்டே இருங்க. ஜிஎஸ்டி நோய்.. என்கிறது இந்த மீம்..