100% சம்பள உயர்வு குடுத்தது எம்எல்ஏ பதவிக்குதான்.. தவறா புரிஞ்சிகிட்டாரோ! நெட்டிசன்ஸ் கலாய்!
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பேருந்தை இயக்கிய அந்தியூர் எம்எல்ஏவுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பேருந்தை இயக்கிய அந்தியூர் எம்எல்ஏக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் நடுவழியில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாமல் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
இதையடுத்து அந்தியூர் எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன் அரசு பேருந்தை இயக்கினார். அந்தியூர் முதல் பவானி வரை அவர் பேருந்தை இயக்கினார். இதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
|
ஒரு வேலை செய்றாங்க..!!
பேருந்தை ஓட்டும் அதிமுக எம்எல்ஏ - ஈரோடு - அந்தியூர் வரை ஓட்டி செல்கிறார்
வாங்குற சம்பளத்துக்கு இப்பதான் உருப்படியா ஒரு வேலை செய்றாங்க..!!
|
தவறா புரிஞ்சிகிட்டாரோ
ஈரோடு -- அந்தியூர் வரை அரசு பேருந்தை ஓட்டிச்செல்லும் அதிமுக எம்எல்ஏ --செய்தி
100% சம்பள உயர்வு குடுத்தது எம்எல்ஏ பதவிகுய்யா தவறா புரிஞ்சிகிட்டாரோ
|
பாராட்டுதலுக்குரியது
உண்மையில் அந்தியூர் MLA ராஜகிருஹ்ணன் செயல் பாராட்டதலுக்குரியது.
|
பேருந்தை இயக்கிய எம்எல்ஏ
ஈரோடு : அந்தியூர் பணிமனையில் இருந்து, பவானிக்கு 50 பயணிகளுடன் அரசு பேருந்தை ஓட்டி சென்றார் அதிமுக எம்எல்ஏ ராஜா கிருஷ்ணமூர்த்தி.
வேலைநிறுத்தம் காரணமாக ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க மறுத்ததை அடுத்து பேருந்தை எம்எல்ஏ இயக்கினார்.
|
வாழ்த்துகள்!
#வாழ்த்துக்கள்
ஓட்டுநராக மாரி அரசு பஸ் ஓட்டும் அந்தியூர் #சட்டமன்ற உறுப்பினர்..!!!