மதுரை மீனாட்சி அம்மன் உக்கிரமாக உள்ளார்.. டிவிட்டரில் மக்கள் குமுறல்!
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின.
தீ விபத்தால் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் மதுரை தீ விபத்து குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
தீ விபத்துனு கேட்டதில் இருந்து
மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் தீ விபத்துனு கேட்டதுல இருந்து.
|
உக்கிரமாக உள்ளார்
ஹெச் ராஜா, ஜீயர்,நித்தியானந்தா சீடர்கள்,விஜயேந்திரர் செயல்களால் மதுரை மீனாட்சியம்மன் உக்கிரமாக உள்ளார், அதன் வெளிப்பாடே இந்தத் தீ!
இவர்கள் எல்லாம் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டால் அம்மனின் கோபம் குறையலாம்!
|
இதான் ஒரே வழி
மீனாட்சியம்மன் கோயில்ல தீயாம் கடையை காலி செய்ய இதான் ஒரே வழி போல இருக்கு
|
கண்ணகி எரித்தப்பிறகு..
மதுரையில் புராண காலங்களில் கண்ணகி மதுரையை எரித்த பின்னர் முதல்முறையாக பல நூறு ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பெரிய தீ விபத்து நடந்துள்ளது அக்கிரமங்கள் தலைதூக்கும் போது தான் இம் மாதிரி சம்பவம் நடக்கும் !!!!