நான்லாம் சனி கூடவே வாழ்றவன் இதப்பத்திலாம் கவலை இல்லை! #சனிப்பெயர்ச்சி
Recommended Video
சென்னை சனிப்பெயர்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் சனி பரிகார தலமான திருநள்ளாறில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
|
வா வந்து பாரு !!!
என்ன விட்டு போனாலும், என்கிட்டே வந்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல, மரணத்தை வென்றவள் உன்னை வெல்ல மாட்டேனா ? வா வந்து பாரு !!! என்கிறது இந்த டிவிட்
|
கோவில்களில் ஏகப்பட்ட கூட்டம்!
கடவுள்கள் அத்தனைபேரும் கடகராசி போல!
சனிப்பெயர்ச்சி அமோகமாக இருக்கிறது!
அலுவலகம் வரும்வழியில் கடந்துவந்த அத்தனை கோவிலிலும் ஏகப்பட்ட கூட்டம்! என்கிறார் இந்த நெட்டிசன்
|
நான்லாம் சனி கூடவே வாழ்றவன்
சனி வந்துட்டு போறவங்கதான் சனிப்பெயர்ச்சி பாப்பாங்க
நான்லாம் சனி கூடவே வாழ்றவன் இதப்பத்திலாம் கவலை இல்லை.. என்கிறது இந்த டிவிட்
|
பிரசாதம் சாப்பிடற வேலைன்னா?
சனிப்பெயர்ச்சினு கோயிலை நோக்கி செல்லாம
நாம செய்யும் வேலையை நோக்கி போ
நாம செய்யற வேலையே கோயில்ல பிரசாதம் சாப்பிடற வேலைன்னா?என்கிறார் இந்த நெட்டிசன்
|
பலத்த கூட்டுங்க
அடே ராசிக்கு மட்டும் பலன் பாக்காமா கொஞ்சம் முயற்சி பன்னி உங்க செயலுக்கு பலத்த கூட்டுங்க என்கிறது இந்த டிவிட்