நல்லவரா இருக்கலாம், ரொம்ப நல்லவரா இருக்க கூடாதுக்கா.. தமிழிசைக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்தோம் என தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: காவிரி விவகாரத்தில் அரசியல் செய்தோம் என தமிழிசை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்தோம் என தெரிவித்தார். தமிழிசையின் இந்த ஓபன் டாக் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
அரசியலா?
ஆமாம்... காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம்-தமிழிசை
அரசியலா???
|
பாருங்க மக்களே
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் : அக்கா தமிழிசை
எவ்வளவு சுயநலம்.பாருங்க மக்களே..!!
|
நல்லவரா இருக்கக்கூடாதுக்கா
தமிழிசை அக்கா இன்னொரு விஜயகாந்த்
மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுகிறார்கள்
நல்லவரா இருக்கலாம், ரொம்ப நல்லவரா இருக்க கூடாதுக்கா
|
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தா..
கர்நாடகாவில் பாஜ. ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் -தமிழிசை
அடுத்து என்ன தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தா தண்ணி வரும் அதான...