For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யோ போச்சே.. போச்சே.. மணல் மாஃபியாஸ் மைன்ட் வாய்ஸ்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 6 மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் மணல் குவாரிகளுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லாரும் பதருவாங்க

அனைத்து #மணல் குவாரிகளையும் மூட வேண்டும் - உயர்நீதிமன்றம்
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாரும் கெடந்து பதறுவானுக பாருங்களேன்

மாஃபியாகளுக்கு மரண அடி

தமிழகத்தில் அனைத்து மணல் குவாரியையும் மூட ஐகோர்ட் உத்தரவு:செய்தி
மேலும் 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று சொன்ன மணல் மாஃபியாகளுக்கு மரண அடி.

வரவேற்கத்தக்க முடிவே...

சரியான தீர்ப்பு....
6 மாதத்திற்குள் அனைத்து மணல் குவாரிகள் மூட வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க முடிவே...
அரசே இம்முடிவை எடுத்திருக்க வேண்டும்...
மேல் முறையீடு செய்யாமல் இதை நடைமுறை படுத்தவேண்டும்....

அய்யோ போச்சே

மணல் மாஃபியாக்களின் தற்போதைய சூழ்நிலை.. அய்யோ போச்சே போச்சே.. என்கிறது இந்த டிவிட்..

10 வருஷமாவது மூடணும்

மணல் குவாரிய குறைஞ்சது 10 வருஷமாவது மூடணும் #sand ஸ்டேவாங்கி டார்க் வேர்ல்ட கூப்பிட்றாதிங்க... என்கறார் இந்த நெட்டிசன்..

English summary
Madurai high court bench ordered to close sand quary in Tamilnadu. Netizens welcomes court order on the sand quary issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X