அய்யோ போச்சே.. போச்சே.. மணல் மாஃபியாஸ் மைன்ட் வாய்ஸ்!
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 6 மாதத்துக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் மணல் குவாரிகளுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து #மணல் குவாரிகளையும் மூட வேண்டும் - உயர்நீதிமன்றம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாரும் கெடந்து பதறுவானுக பாருங்களேன் |
எல்லாரும் பதருவாங்க
அனைத்து #மணல் குவாரிகளையும் மூட வேண்டும் - உயர்நீதிமன்றம்
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாரும் கெடந்து பதறுவானுக பாருங்களேன்
|
மாஃபியாகளுக்கு மரண அடி
தமிழகத்தில் அனைத்து மணல் குவாரியையும் மூட ஐகோர்ட் உத்தரவு:செய்தி
மேலும் 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று சொன்ன மணல் மாஃபியாகளுக்கு மரண அடி.
|
வரவேற்கத்தக்க முடிவே...
சரியான தீர்ப்பு....
6 மாதத்திற்குள் அனைத்து மணல் குவாரிகள் மூட வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க முடிவே...
அரசே இம்முடிவை எடுத்திருக்க வேண்டும்...
மேல் முறையீடு செய்யாமல் இதை நடைமுறை படுத்தவேண்டும்....
|
அய்யோ போச்சே
மணல் மாஃபியாக்களின் தற்போதைய சூழ்நிலை.. அய்யோ போச்சே போச்சே.. என்கிறது இந்த டிவிட்..
|
10 வருஷமாவது மூடணும்
மணல் குவாரிய குறைஞ்சது 10 வருஷமாவது மூடணும் #sand ஸ்டேவாங்கி டார்க் வேர்ல்ட கூப்பிட்றாதிங்க... என்கறார் இந்த நெட்டிசன்..