காமத்தை கூட அழகியலோடு முணுமுணுக்க வைத்தவர்.. பிறந்தநாள் வாழ்த்துகள் வைரமுத்து!
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்டிசன்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்டிசன்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கவிப்பேரரசு வைரமுத்து தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் 1953ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பிறந்தார். கலைமாமணி விருது, சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷன் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 6 முறை குவித்துள்ளார் வைரமுத்து. இன்று 65வது பிறந்தநாளை காணும் அவருக்கு நெட்டிசன்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
|
கருவாச்சிக்கொரு காவியம்
இப்படி ஒரு படைபாளியை இலக்கிய உலகம் இன்னும் சற்றே அதீதமாய் உணரவில்லையென்றே தோன்றுகிறது....
நோபல் தந்து சிறப்பிக்க...
அதை காணவும் காத்திருக்கிறோம்...
100 வருட இலக்கிய நோபல் தாகத்தை தீர்த்து வை
கவிஞனே.....
கருவாச்சிக்கொரு காவியம்♥...
#வைரமுத்து.....
|
எனக்குள் இருந்த காதலும்..
வைரமுத்துவின் வரிகளால்
அழகானது தமிழ் மட்டுமல்ல..
எனக்குள் இருந்த காதலும்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
|
கருப்பு செம்பு
வைரமுத்து மட்டும் இல்லையென்றா தமிழ் வளர்ந்து இருக்குமா. கருப்பு செம்பு
|
அழகியலோடு
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி ..
காமத்தை கூட அழகியலோடு முணுமுணுக்க வைத்தவர்.
HBD வைரமுத்து
|
வாழ்த்துக்களும்.. நன்றிகளும்
தமிழின் இனிமையை தன் காவியங்களிலும், பாடல்கள் மூலமும் உணர்த்தும் ஓர் ஒப்பற்ற மகா கலைஞர்... ஐயா.. வைரமுத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்.. நன்றிகளும்...
|
நல் வாழ்த்துக்கள்
கருநீலக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
|
நாசிக்குச் சிக்காத வாசம் நீ
நாவுக்குச் சிக்காத அமிர்தம் நீ
நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணனுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ
#வைரமுத்து
|
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வைரம் உடைய வரிகள் வடிவமைத்தவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.