“பொங்கல் வருது.. மண்ட பத்திரம் மக்கா”.. ஆண்களின் நலன் கருதி வைரலாகும் வாட்ஸப் பதிவு!
பொங்கல் பற்றி வைரலாகும் வாட்ஸப் பதிவு.
சென்னை: பொங்கல் பண்டிகை வந்து விட்டது. பொங்கல் என்றாலே வீட்டை வெள்ளையடித்து, சுத்தப்படுத்தி என வீட்டில் வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் ஆண்களின் பொதுநலன் கருதி வெளியிடுவதாக ஆண்கள் பாதுகாப்பு பேரவை பேரில் வாட்ஸப் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆண்களுக்கான பொங்கல் சிறப்புபதிவு என்ற தலைப்பில் வலம் வரும் அந்தப் பதிவில் பொங்கல் சுத்தப் படுத்தும் வேலையின் போது ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் பகிரப்பட்டுள்ளது.
எல்லா வீடுகளிலும் சுத்தப் படுத்தும் பணியில் ஆண்கள் தான் ஈடுபடுகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் இந்தப் பதிவை ஆண்களும் கெத்தாக பகிர்ந்து வருகின்றனர்.
படிக்கப் படிக்க சிரிப்பாக மட்டுமின்றி, சிந்திக்கவும் வைக்கும் வகையில் உபயோகமாகவும் உள்ளது இந்தப் பதிவு. இதோ உங்களுக்காக அந்தப் பதிவும், அதோடு நமது மீம்ஸ்ஸும்...