கதை இன்னும் முடியவில்லை.. அதற்குள் புத்தகம் மூடப்பட்டுவிட்டது! #WeMissYouAmma
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் ஜெயலலிதா குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில
|
சிம்ம சொப்பனமாக விளங்கியவர்
அம்மா என்றால் ஆளுமை
ஆணாதிக்க உலகத்தில்
சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அம்மா
|
எட்டாவது அதிசயம் நீ..
அகிலமே திரும்பி பார்த்த உலகின் எட்டாவது அதிசயம் நீ !!!
|
இழந்துவிட்டோம்..
அம்மா உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. உண்மையிலேயே எங்களின் இரும்பு பெண்மணியை இழந்துவிட்டோம்..
|
உங்களிடம் வெற்றிடம்..
உங்கள் வெற்றிடத்தை நிரப்ப யாராலும் முடியாது...
|
வேறு யாருக்கும் வராது..
இந்த அளவு துணிவு,தைரியம்,கம்பிரம் வேறு யாருக்கும் வராது.. இதுவே இந்தியாவின் இரும்புப்பெண்மணி என்று அழைப்பதர்க்கு உதாரணம்....
|
ஓராண்டு ஓடிப்போய்விட்டது
நம்ப முடியவில்லை.. ஓராண்டு ஓடிப்போய்விட்டது.. மிஸ் யூ அம்மா.. எங்கள் இரும்பு பெண்மணி..
|
புத்தகம் மூடப்பட்டுவிட்டது..
கதை இன்னும் முடியவில்லை.. அதற்குள் புத்தகம் மூடப்பட்டுவிட்டது.. வி மிஸ் யூ..
|
மக்களால் நான் மக்களுக்காக நான்..
அம்மா.. தமிழகத்தின் இரும்பு பெண்மணி.. உங்கள் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.. வி மிஸ் யூ.. நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருப்பீர்கள்.. மக்களால் நான் மக்களுக்காக நான்..