For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன இன்னைக்கு ஓவரா ஜாம் ஆகுதே...

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை வைத்து மீம்ஸ் செய்து கலாய்ப்பதில் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சர்கள் இப்போது வலைதளங்களில் அதிகம் வறுபடுகிறார்கள். அமைச்சர் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மீம்ஸ் கலைஞர்களுக்கு அதிகம் தீனி போடுகின்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன் என்ன பேசினாலும் அது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் ஆகிறது. பிரதமர் பெயரை மன்மோகன் சிங் என்று கூறியது கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தோம் என்று கூறி காலை முதலே வலைத்தளங்களில் வறுத்து எடுத்து வருகின்றனா.

ஏதோ ஒரு சிங்

பொதுக்கூட்டத்தில் பிரதமர் பெயரை மன்மோகன் சிங் என மாற்றி சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மன்மோகன் சிங்கா ஹர்பஜன் சிங்கா, பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு.!!

மன்மோகன் சிங்கை பார்த்தாரா?

என்னது? மன்மோகன் சிங்க பாத்தாரா? செஞ்சுருந்தாலும் செஞ்சிருப்பாரு.

அமைச்சரின் உளரல்கள்

#திண்டுக்கல்சீனிவாசன் : மோடிஐயாஜி...வாரணவாசி தொகுதி...ஆங்...ஆங்...பரதநாட்டிய கலைஞர் #சுதாரகுநாதன் ஜி...ஆமாஜி...எல்லாம் ஜி...ஆமாம் ஜி...ஓகேஜி

ஓவரா தடுமாறுதே

பிரதமரின் பெயரை மன்மோகன்சிங் என மாற்றிக்கூறிய திண்டுக்கல் சீனிவாசன்-செய்தி # என்ன இன்னிக்கு ரெம்ப ஜாம் ஆகுது என்றபடியே நடந்து சென்றார் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

சொன்னவங்கதானே நீங்க

ட்ரப்ம்பே வந்தாலும் ஆட்சிய கலைக்க முடியாது - திண்டுக்கல் சீனிவாசன் . அடிச்சி விடுங்க பிரதமரே மன்மோகன் சிங் சொன்னவரு தான நீங்க என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

English summary
Social media on Friday trolled Forest minister Dindigul Srinivasan after his speech Inida's prime minister Manmohan singh.Dindigul Srinivasan, the Minister for Forests in the Tamil Nadu government, some things are hard to forget.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X