பரணிகளுக்கும், சென்றாயன்களுக்கும் பிக்பாஸ் வீட்டில் மதிப்பே இல்லை.. நெட்டிசன்ஸ் குமுறல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்றாயன் அவமதிக்கப்படுவதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்றாயன் அவமதிக்கப்படுவதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்துவிட்டது. வாரந்தோறும் ஒரு போட்டியாளர் சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆனால் நிகழ்ச்சியில் இதுவரை பாராட்டும் படியோ பார்த்து ரசிக்கும் படியோ எதுவும் இல்லை. மாறாக ஆதிக்கம், ஆபாசம், அவமதிப்புகளே நிறைந்து காணப்படுகிறது. இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
|
போர் அடிக்குது
எவிக்ஷன் நடக்குற அந்த இரண்டு நாள் மட்டும் தான் பிக்பாஸ் டேக் TL சுவாரஸ்யமா இருக்கு... அதுக்கு அப்புறம் போர் அடிக்குது...
|
மும்தாஜ்கள் வாழ்க
பரணிகளுக்கும், சென்றாயனுகளுக்கும் பிக்பாஸ் வீட்டில் மதிப்பும் இல்லை, இடமும் இல்லை. மும்தாஜ்கள் வாழ்க!
|
ஓட்டு போடுவதில்லை
எங்கள் ஓட்டுக்கு மதிப்பில்லை; நாங்கள் ஓட்டு போடுவதில்லை பிக்பாஸ் .
|
கருத்து சொன்னாலே போதும்
பிக்பாசை யாரும் நம்ப வேண்டாம் டெய்லி பார்த்துவிட்டு இப்படி கருத்து சொன்னாலே போதும் _பிக்பாஸ்
|
நம்ம மனசாட்சி தான்
"உண்மையான பிக்பாஸ் வீடு நம்ம மனசாட்சி தான். அங்கதான் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது"