மகனின் ஆர்ம்ஸை பார்த்து புன்னகைத்த விஜயகாந்த்... விழுந்து விழுந்து ரசித்த தொண்டர்கள்
மகனின் ஆர்ம்ஸை பார்த்து விஜயகாந்த் புன்னகைத்தார். அந்த புகைப்படத்தை தொண்டர்கள் விழுந்து விழுந்து ரசித்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: மகன் சண்முகபாண்டியனின் ஆர்ம்ஸில் பச்சை குத்தப்பட்ட கண்களை பார்த்து விஜயகாந்த் புன்னகைத்தார். அவற்றை தொண்டர்கள் மனமகிழ்ந்து ரசித்துள்ளனர்.
விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் தமிழில் சகாப்தம் என்ற படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மதுர வீரன் படத்தில் நடித்தார்.
இதையடுத்து தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதை முடித்துக் கொண்டு சண்முகபாண்டியன் இன்று வீடு திரும்பினார்.
விஜயகாந்த் வரவேற்பு
மகன் சண்முகபாண்டியனை வாசல் வரை சென்று விஜயகாந்த் வரவேற்றார். அப்போது தன் கையில் அப்பாவின் அனல் பறக்கும் கண்களை பச்சை குத்தியிருந்ததை விஜயகாந்திடம் காண்பித்தார். அதை பார்த்து விஜயகாந்த் புன்னகைத்தார். இந்த படங்களை விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த படங்கள் வைரலாகியுள்ளன.
|
ஈடாகாது
அவரு கையில பச்சை குத்தி இருக்குறத விட அந்த குழந்தைபோல் உங்க பச்ச சிரிப்புக்கு எதற்கும் ஈடாகாது தலைவா
|
அல்லுது தலைவா
அந்த TaTTo வ விட 💓உங்கள் முகத்தில் உள்ள 😎புன்னகை இருக்கே சும்மா அல்லுது 😍 தலைவா
|
குழந்தைசாமி ...நீ... தலைவா
பச்ச குழந்தை சாமி....நீ
|
பழைய பன்னீர் செல்வமா வரனும்
கேப்டன் நீங்க பழைய பன்னீர் செல்வமா வரனும்
|
பெரிய ஆம்ஸ் உள்ளவங்கள ...
ப்ரோ,உங்க அப்பாக்கிட்ட ஆம்ஸ் எல்லாம் காட்டாதிங்க அவரு உங்கள விட பெரிய ஆம்ஸ் உள்ளவங்கள எல்லாம் அடிச்சி தொங்க விட்டவரு!!
|
எதிர் நிற்பதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ'ன்னு இப்ப பாட வேண்டிய உங்களுக்கு உடல்நலம் கெட்டது துரதிஷ்டவசமானது!
|
தமிழனா இருந்த ஷேர் பண்ணு
அடுத்த படத்துக்கு, தமிழன இருந்த ஷேர் பண்ணு, என்று பெயர் வையுங்கள். ரொம்ப நல்லாயிருக்கும்.