ஒருநாள் படைச்சோம்.. ஒருநாள் துடைச்சோம்.. நாலு நாள் லீவும் இப்டி வேகமா முடிஞ்சிடுச்சே!
ஆயுத பூஜை விடுமுறை பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டுமென்றால், பெரியவர்களும்கூட குழந்தைகள் மாதிரி அழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தாண்டு வியாழன், வெள்ளியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வந்துவிட, பிறகென்ன தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பள்ளி, கல்லூரி மட்டுமின்றி அலுவலகங்களுக்கும் விடுமுறை கிடைத்து விட்டது. சனி, ஞாயிறு முடிந்து திங்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இப்போது நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து என்றால் கேட்கவா வேண்டும்.
அதிலும் இந்த விடுமுறை பெரும்பாலானவர்களுக்கு வண்டியைக் கழுவவும், வீட்டைச் சுத்தப் படுத்தவுமே சரியாக இருந்திருக்கும். இப்படி டக்கென விடுமுறை முடிந்து விட்டதே என்ற கவலையை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
யார் அந்த 3 பேர்.. சூட்கேஸில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் கொலையில்