ABCD... யின் காதல்....!
A(எ)ன்னுடைய பார்வையிலே
B(பி)ம்பமாய் வந்தவளே.. உன்
C(சி)ங்கார கூந்தலிலே..
D(டி)சம்பர் பூ சிரிக்குதடி...
E(எ)ன்னோடு உன்னை இணைத்து
F(எப்)போது கனவு கண்டாலும்..
G(ஜி)ல் என்று குளிருதடி...
H(எச்)சமாய் விழும் உன் பேச்சு
I(ஐ)ம்புலனும் தெரிக்குதடி
J(ஜ)ன்னலில் இருந்து பார்த்தாலும்
K(கே)லி செய்யும் உன் விழிகளைக் காணும்போது
L(எல்)லையில்லா இன்பமடி...
M(உம்)முடைய பேச்சும்
N(என்)னுடைய மூச்சும்
O(ஒ)ன்றாய் இணையுதடி...
P(பி)ன்னிப் பிணைந்த நம் காதல்
Q(கி)யூ வில் நிற்குதடி...
R(ர)ன்னிங் கில் வந்தாலும் முதலிடம் நீ...
S(எஸ்) என்று நீ சொல்லும் வரை
T(டி)க் டிக் என்று என் மனம் துடிக்குதடி
U(இவ்)வுலகம் மறைந்தாலும்
V(வி)ண்ணுலகம் சென்றாலும்
W(Double U )தானடி நம் காதல்..
X(எக்ஸ்)ரே எடுத்தாலும் நீ
Y என்று யாரும் கேட்பதற்கு முன்
Z(சட்)டென்று திருமணத்திற்கு சம்மதம் சொல்லடி....!
இராம.சக்திவேல்
மதுரை.