Monday Motivation: நல்லது நினைச்சா நல்லது.. கெட்டது நினைச்சா கெட்டது!
நாம நல்லது நினைச்சா அதை விட பல மடங்கு நல்லது நமக்கு நடக்கும். அதுவே நாம யாருக்காவது கெட்டது நினைச்சோம்னு வைங்களேன்.. அதை விட பல மடங்கு தப்புத் தப்பா நமக்கு நடக்கும்.. அதுவும் உடனே நடக்கும்.. இதெல்லாம் இப்போது நிறையப் பேர் அனுபவிச்சிருப்பீங்க.
முன்னாடி மாதிரில்லாம் இப்ப கிடையாதுங்க.. நாம செய்வதற்கேற்ற பலன்கள் இந்தப் பிறவியிலேயே அதுவும் உடனுக்குடன் கிடைத்து விடுகிறது. இதைத்தான் திருவள்ளுவரும் அழகாக ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொல்லியுள்ளார்:-
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"
அப்படின்னு பளிச்சென்று சொல்லியிருக்கிறார்.. ஒரு குட்டிக்கதை பார்ப்போமா,... இன்னும் எளிமையா உங்களுக்குப் புரியும்.
ராஜூ படிப்பில் படுசுட்டிப் பையன். ஆனால் குறும்புகளின் மன்னன். பள்ளியில் அவன் ஆசிரியர் பெற்றோர்களை அழைத்து அவன் குறும்புத்தனத்தைக் கூறினார். அவன் ஆசிரியர் பாடம் நடத்தினால் அவர் மேல் ராக்கெட் விடுவான். நண்பர்கள் வகுப்பிற்குள் நுழையும் போது அவர்கள் மீது குப்பையைக் கொட்டி விடுவான்.
பாராட்டுங்கள்.. தட்டிக் கொடுங்கள்.. நேசம் பெருகட்டும்
தீபாவளி சமயம் அது. வீட்டு வாசலில் பட்டாசுகளை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து வாசலில் வெடித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு நாய் ஓடியது. உடனே அவன் அந்த நாயைப் பிடித்து அதன் வாலில் சரவெடியைக் கட்டிப் பற்ற வைத்தான். அது பட்டாசு வெடிக்கும் போது அங்குமிங்கும் ஓடி பின் அவனைத் துரத்த ஆரம்பித்தது. நாய்க்குப் பயந்து ஓடிய அவன் கல் தடுக்கி அவன் வைத்திருந்த பட்டாசுகள் மீது விழ அவன் மீது நாயும் விழ பட்டாசு வெடித்ததில் அவனுக்குப் பலத்த அடி.
உடனே மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தான். கண் விழித்துப் பார்த்த போது அழுதுக்கொண்டே அவன் பெற்றோர்கள் எதிரே நின்றிருந்தனர். அப்பொழுது அவன் அம்மா பார்த்தாயா ராஜூ உன்னுடைய குறும்புத்தனத்தால் இன்று உன் நிலையைப் பார் என்றாள். அவன் அம்மாவிடம் சாரிம்மா இனி இப்படி குறும்புத்தனம் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தான்.
அவன் நாய்க்குப் பட்டாசு வைத்து அது துன்பப்படுவதைப் பார்க்க நினைத்தான் ஆனால் இறுதியில் அது அவனுக்கே ஆபத்தாகி விட்டது பார்த்தீர்களா. நாம் பிறருக்கு கேடு நினைத்தால் நமக்கும் கேடு தான் விளையும். அதனால் முடிந்தவரை எல்லோருக்கும் நன்மையைச் செய்யுங்கள் உங்களுக்கும் நல்லதே நடக்கும் சரியா செல்லூஸ்!!