ஒரே காதலில்.. ஓராயிரம் அற்புதங்கள்!
காதலே ஒரு அற்புதம்தான்.. அந்தக் காதல் நிகழ்த்தும் அற்புதங்கள் எப்படி இருக்கும்.. கற்பனை செய்து பார்க்கும்போதே மனசெல்லாம் ஜில்லுன்னு ஆகுது பாத்தீங்களா.. அதுதாங்க காதல்.
காதலில் இரண்டு சந்தோஷங்கள் மட்டுமே உண்டு.. ஒன்று காதலிப்பது.. இன்னொன்று காதலிக்கப்படுவது. இதில் எது நடந்தாலும் இருவருக்குமே அத்தனை அத்தனை இன்பம்.. கோடிக்கணக்கான கிடார்கள் கூட இளையராஜா பாடலைப் போடுவது போல .. அப்படி ஒரு சுகானுபவம்.
நாம் ஒருவரைக் காதலிக்கிறோம் என்றால் நிச்சயம் அவரிடம் நமக்கு ஏதேனும் ஒரு சில விஷயங்கள் பிடித்திருக்கும். தினம் தினம் அவர் முகம் பார்க்கத் தோன்றும் தினம் தினம் அவருடன் பேசத் தோன்றும். இரு உள்ளமும் சங்கமிப்பது தான் காதல். நம்மை யாரேனும் காதலித்தால் நம் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும். நம் வாழ்க்கைத் துணையாக காலம் முழுவதும் நம்மோடு இருப்பவரின் காதலை நாம் உணர வேண்டும்.
கண்களைப் பார்த்து வர கூடியது தான் உண்மையான காதல். நம்மைக் காதலிப்பவர் நமக்காக எதையும் செய்வார். தன் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து மனம் விட்டுப் பேசி காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். உங்களை யாரேனும் காதலித்தால் அந்த காதலை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுங்கள் எக்காலத்திலும் அதை உதாசீனப்படுத்தி விடாதீர்கள்.
நம்மை யார் காதலிக்கிறார்களோ அவர்களோடு நாம் வாழும் போது நமக்காக அவர் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து செய்வார். காதல் செய்யும் மாயம் நம் துணையை தவிர அனைத்தையும் மறக்கச் செய்து விடும். உள்ளங்கள் ஒன்றோடு இயைந்திருப்பதே உண்மையான காதல். காதல் செய்வீர் உங்களை யாரேனும் காதலித்தால் அவர்களோடு உங்கள் வாழ்வைத் தொடங்குங்கள்.
காதல் மழையில் நனையுங்கள். காதல் இனிமையானது. ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து ரசித்து வாழுங்கள். உங்கள் துணையைக் காதலித்து மகிழ்ச்சியாக இருங்கள். காதல் செய்யும் அற்பதங்கள் பல. காதலுக்கு ஏழை பணக்காரன் கிடையாது வயது வித்தியாசம் கிடையாது. மனங்களின் சங்கமமே காதல். காதல் என்பது இதயங்களின் அன்பின் வெளிப்பாடு. காதலித்துப் பாருங்கள் அதன் அற்புதத்தை ரசித்து மகிழுங்கள்.