இதயம் சொல்வதை கேளுங்கள்!
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பார்கள்.. எதையும் உணர்வுப்பூர்வமாக உணருங்கள்.. இதயத்திலிருந்து கொட்டட்டும் உங்களது உணர்வுகள்.
அன்பு நிறைந்த இதயத்தால் எதையும் சாதிக்க முடியும். பலவிதமான உணர்வுகள் நிறைந்தது இதயம். அன்பு நிறைந்த இதயம் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கும். நம்மிடம் பிறர் அன்பு காட்டும் போதும் நாம் மற்றவரிடம் அன்பு காட்டும் போதும் அதனால் ஏற்படும் சுகமே தனி தான். அன்போடு நமக்குப் பிடித்தவருக்காக ஒரு செயலைச் செய்யும் போது அந்த செயல் மிகவும் அழகாகிறது நீங்கள் உங்கள் துணைக்காகத் தயாரிக்கும் உணவை அன்போடு தயாரிக்கும் போது அதன் சுவையே தனி தான்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பினால் துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விடும். இரு இதயம் ஒன்று சேரும் போது இருவருடைய அன்பும் காதலும் பரிமாறப்படுகிறது. நாம் மனதால் ஒருவரை மகிழ்ச்சியோடு வாழ்த்தும்போது அதன் மதிப்பே தனி தான்.
உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைக்கு எப்பவும் ஒரு சக்தி உண்டு. இதயத்தில் எப்பொழுதும் அன்பு பொங்கட்டும். இரு மனம் இணைவதே திருமணம் என்பார்கள். முடிந்தவரை எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். வாயில்லா ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துங்கள். அன்பால் அகிலத்தை ஆளலாம். எந்த ஒரு இதயத்தில் நல்ல எண்ணங்கள் பிறக்கிறதோ அந்த மனிதன் எல்லாப் புகழும் அடைவான்.
உங்கள் இதயம் அன்பால் நிறையட்டும். எந்த ஒரு செயலைச் செய்தாலும் முழுமனதோடு அன்போடு மகிழ்ச்சியாக செய்துப பாருங்கள். வெற்றி என்றும் உங்களுக்கே. இதயம் சொல்வதைக் கேளுங்கள் சந்தோசமா இருங்க.