வெல்வது முக்கியமில்லை.. வீரர்களே எப்போதும் வெல்வதுமில்லை.. போரிடுவதே முக்கியம்!
ஒரு அழகான வாசகம் உண்டு.. "வீரர்களே எப்போதும் போர்களில் வெல்வதில்லை.. மாறாக எவன் ஒருவன் தொடர்ந்து போரிடுகிறானோ அவனே வெல்வான்" என்பதே அந்த வாசகம்.
எத்தனை பெரிய உண்மை பாருங்கள்.. எல்லாம் செஞ்சு பார்த்தேன் முடியலை.. விட்டுட்டேன்.. என்று சொல்வோர்தான் அதிகம்.. என்ன ஆனாலும் சரி அதை சாதிக்காமல் விட மாட்டேன் என்று சொல்லிச் சொல்லி தொடர்ந்து முயன்று வெற்றி பெறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
உண்மையில் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் உண்மையான போர் வீரர்கள் வெற்றியாளர்கள். கதவைத் தட்டிப் பார்த்தேன் திறக்கலை.. அதனால தட்டுவதை விட்டு விட்டேன் என்று சொல்வது இயலாமை.. அதுவே அந்தக் கதவை திறக்க தொடர்ந்து தட்டுவதும் அல்லது மாற்று வழியைக் கண்டுபிடிப்பதும்தான் புத்திசாலித்தனம்.
முயற்சி திருவினையாக்கும் என்பது போல் தொடர்ந்து முயற்சி செய்யும் மனிதனே வாழ்வில் வெற்றியடைகிறான். எனக்கு இந்த செயல் வராது என்று நினைக்காமல் ஏன் எனக்கு அந்த செயல் ஏன் எனக்கு வரவில்லை நிச்சயம் அச்செயலில் வெற்றி அடைந்தே தீருபவன் தான் சிறந்த வீரன்.
முதல் முயற்சியிலியே நம்மால் சைக்கிள் ஓட்ட முடியுமா. முடியாது. பல முறை முயற்சி செய்து கீழே விழுந்து எழுந்து அடிபட்ட பிறகு சைக்கிள் ஓட்டும் போது கிடைக்கும் சந்தோசமே தனி தான். ஒரு முறை சைக்கிளில் இருந்து கீழே விழுந்துவிட்டோமே என்று ஒதுங்கி நின்றால் காலத்திற்கும் நடைராஜா தான். அதுவே மீ்ண்டும் மீண்டும் முயற்சி செய்தால் நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும்.
முதல் முயற்சியிலேயே எவருக்கும் வெற்றிக் கிடைக்காது. எதிர்நீச்சல் போட்டால் தான் சில சமயங்களில் வெற்றி கிடைக்கிறது. சிறு குழந்தைகள் முதலில் படிக்கச் சொன்னால் சரியாகப் படிக்கத் தெரியாது. எனக்குப் படிக்க வரவில்லை நான் படிக்கமாட்டேன் என்று அக்குழந்தை அடம்பிடித்தால் அது எப்பொழுதும் படிக்க முடியாது. அதுவே அக்குழந்தையை நாம் முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படிக்க வைத்தால் மட்டுமே அக்குழந்தையால் படிக்க முடியும்.
உங்கள் நிறுவனத்தை உடைக்கும் நேரம் வந்துவிட்டது.. அமேசானுக்கு எலோன் மஸ்க் பகிரங்க எச்சரிக்கை.. பகீர்!
சிலந்தி போல எதிர்நீச்சல் போட்டால் தான வாழ்வில் வெற்றியடைய முடியும். எனக்கு இது வராது என்னால் முடியாது என்று நினைப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயற்சி வேண்டும் வெற்றிக்கனியை எட்டும் வரை. அலைகள் ஓய்வதில்லை அது போல் நாமும் வெற்றியடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். உங்களால் முடியும் உங்களால் மட்டுமே முடியும் என்ற நினைப்போடு ஒரு முறையல்ல பலமுறை போராடுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்.