இதைச் செய்ய முடிந்தால் எதையும் செய்யலாமே!
எது நடக்கவேண்டுமானாலும் அதில் ஒரு மேஜிக் மாதிரி அது நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதில் உண்மை இருக்குங்க.. எது நடந்தாலும் மேஜிக் மாதிரி அது நடந்தேற வேண்டும்.
எதையுமே செய்ய மனதில் ஒரு தன்னம்பிக்கை ஆழ வேரூண்றி இருக்க வேண்டும். அதுதான் நம்மை உந்தித்தள்ளி நம்மை சாதிக்கவைக்கும்.. எதையும் செய்யத் தூண்டும். அதுதான் வெற்றிக்கும் முக்கியம். இதையே செய்து விட்டோம்.. எதையும் நம்மால் செய்ய முடியும் என்று மட்டும் நினைத்துப் பாருங்கள்.. உங்களால் எதையும் எளிதாக சாதிக்க முடியும். இது அனுபவம்.
துவண்டுக் கிடக்கும் மனிதனைக் கூட தூக்கி நிறுத்தக் கூடிய நம்பிக்கை. நம்பிக்கை இருந்தால் மட்டுமே இலக்குகளை எட்ட முடியும். நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இன்று அனைவரும் கொரோனாவால் வீட்டில் இருக்கிறோம் ஆனால் இதையும் கடந்து நாம் வாழ்வில் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை அந்த தன்னம்பிக்கை தான் வேண்டும்.
வாழ்க்கையில் எது இல்லையென்றாலும் வாழ முடியும் ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் மனிதன் வாழவே முடியாது. தன்னம்பிக்கையில்லாத மனிதனால் எதையுமே சாதிக்க முடியாது. புதுப்புது முயற்சிகள் செய்து வெற்றிக்கனியை எட்டிட தன்னம்பிக்கை தேவை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர நிச்சயம் ஏதேனும் ஒரு சிறுவழியிருக்கும். அது தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உடைய மனிதன் வாழ்வில் உயர்கிறான்.
Monday Motivation: உங்களைச் சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி!
மற்றவர்களின் மீது வைக்கும் நம்பிக்கையை உன்மேல் வை நிச்சயம் வாழ்வில் வெற்றி கிட்டும். தன்னம்பிக்கை உடைய மனிதன் எந்தச் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக மாற்றும் ஆற்றல் படைத்தவன். எனக்கு இது கிடைக்கவில்லை அது கிடைக்கவில்லை என்று புலம்பாமல் எனக்கு அது நிச்சயம் கிடைக்கும் அதற்காக நான் முயற்சி செய்வேன் என்ற தன்னம்பிக்கையோடு போராடுங்கள். வெற்றி உங்கள் பக்கம் தான்.
வாழ்க்கையில் அனைவருக்கும் தன்னம்பிக்கை அவசியம். அதுமட்டுமிருந்தால் எதையும் சாதிக்கலாம் நட்பூக்களே.