யார் நம்பிக்கைக்குரியவர்...?
யாரை நம்பலாம் தெரியுமா.. தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்தான் பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக முடியும். அப்படிப்பட்டவரைத்தான் நாம் நம்பலாம்.. அவர்கள்தான் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க முடியும்.
நம்பிக்கைதானே எல்லாம். முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும். தன்னம்பிக்கை இல்லாத மனிதன் தும்பிக்கை இல்லாத யானை போல.. பலம் இருந்தாலும் தும்பிக்கை இல்லாவிட்டால் என்ன செய்ய முடியும் யானையால். அது போலத்தான் நமக்கும் தன்னம்பிக்கை முதலில் இருக்க வேண்டும். பிறகுதான் எதையும் நம்மால் செய்ய முடியும்.
தன்னம்பிக்கை உள்ள நபர்கள்தான் மற்றவர்களின் திறமைக்கும், அறிவுக்கும் மதிப்பு கொடுப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் தாராளமாக நம்பலாம்.
நம்மை நாமே நம்பவில்லையெனாறால் எந்த ஒரு வெற்றியையும் வாழ்வில் அடைய முடியாது. நீங்கள் சாதனையாளராக வெற்றியாளராக வேண்டும் என்றால் தன்னம்பி்க்கை அவசியம். என்னால் நிச்சயம் வெற்றிப் பெற முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். எத்தனை முறை தோல்வியைச் சந்தித்தாலும் நிச்சயம் நான் ஒரு நாள் அதில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை வேண்டும்.
ஸ்காட்லாந்தில் இறந்த அரியலூர் இளைஞர்... பெற்றோரிடம் உடலை மீட்டுத்தந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
வாழ்க்கையே போர்க்களம் என்பார்கள். இந்தக் களத்தில் தன்னம்பிக்கையோடு இருக்கும் மனிதன் கடினமான சூழலையும் எதிர்க்கொண்டு வாழ்வில் வெற்றியடைகிறான். குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே உன்னால் முடியும் நீ முயற்சி செய் வெற்றியடைவாய் என்று பிள்ளைகளின் நம்பிக்கையைப் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். எந்த ஒரு தொழிலிலும் வெற்றியடைய வேண்டுமெனில் தன்னம்பிக்கை அவசியம்.
இன்று அனைவரும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்திலும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். நான் மீண்டு வருவேன் என்ற தன்னம்பிக்கை தான் கொரோனா நோயாளிகளுக்கு வேண்டும். அதுவே அவர்களைப் பாதி குணமாக்கி விடும்.
வீட்டிலிருப்பவர்களும் தன்னம்பிக்கையோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நோயிலிருந்து தப்பலாம். உங்கள் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் எந்த ஒரு சூழலிலும் விட்டுவிடாதீர்கள். வாழ்க்கையில் எது முக்கியமோ இல்லையோ தன்னம்பிக்கை முக்கியம் அமைச்சரே.