வெற்றி நம்மைத் தேடி வராது.. நாம்தான் தேடிப் போக வேண்டும்
சென்னை: சிலர் நினைப்பதுண்டு.. வெற்றி நம்மைத் தேடி வரும் என்று. அது ஒரு போதும் நடக்காது. நாம்தான் வெற்றியைத் தேடிப் போக வேண்டும்.
நாம்தான் வெற்றியை நோக்கி நடைபோட வேண்டும். அப்போதுதான் அது நம் வசமாகுமே தவிர.. அதுவே வந்து நம் மடியில் விழாது. வெற்றிக்காக உழைப்போருக்குத்தான் அதன் சுவை இனிமையாக இருக்கும்.
உழைப்பின்றி ஊதியம் இல்லை என்பார்கள் அதுபோல கடின உழைப்புக்குப் பிறகு தான் வெற்றி கிடைக்கும். விடாமுயற்சி இருந்தால் தான் வெற்றி அடைய முடியும். சிலருக்கு வெற்றி உடனே கிடைத்துவிடும். சிலருக்கு வெற்றிக்கனி அவ்வளவு எளிதில் கிட்டாது. எல்லா நேரமும் எல்லா விஷயங்களிலும் நமக்கு வெற்றி எளிதில் கிடைக்காது.
வெற்றி கிட்ட வேண்டுமென்றால் திட்டமிடல் அவசியம். நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது அதற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் கவனமாக செய்ய வேண்டும். வானம் தொட்டுவிடும் தூரம் தான் என்று கூறாமல் வானத்தை நிஜமாகவே தொட்டால் தான் உங்களுக்கு அதில் வெற்றிக் கிடைத்ததென்று அர்த்தம்.
உழைப்பில்லாமல் கிடைக்கும் வெற்றியானது நிலையான வெற்றியல்ல. விடாமுயற்சி வெற்றிக்கு அவசியம். என்றுமே வெற்றி உன்னைத் தேடி வராது. நாம் தான் வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும். மரத்தில் ஒரு பழம் இருந்தால் அது நமக்குத் தேவை என்றால் நாம் தான் அதைப் பறிக்க வேண்டுமே தவிர அந்த பழம் நம் கையில் கிடைக்காது.
கனவு காணுங்கள்.. ஆனால் அது மட்டும் போதுமா.. விரும்பி வெல்லுங்கள்
வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் தொடர் முயற்சி அவசியம். அதுமட்டுமின்றி வெற்றியை நோக்கி நாம் தான் செல்ல வேண்டும் அதனால் வெற்றியடைய முயற்சி செய்யுங்கள். நிச்சயம் விரைவில் வாழ்வில் வெற்றி உங்களுக்கே.